பழநி:பழநி முருகன் கோயிலில் மழைக்காலத்தில் பக்தர்கள் வழுக்கி விழுவதை தவிர்க்க, வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில் தரைத்தளங்களில் கோடிட்டு சீரமைக்கும் பணி நடக்கிறது. பழநி முருகன் மலைக்கோயிலுக்கு விழா நாட்கள் மட்டுமின்றி சாதரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கோயில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், சன்னதிகளில் கிரானைட் கற்கள், கருங்கற்களால் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவைகள் பளப்பளப்பாக உள்ளதால், மழை நேரத்தில் பக்தர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில் தரைத்தளத்தில் புள்ளி, கோடு போட்டு சொர... சொரப்பானதாக மாற்றும் பணி நடந்தது. வெயில் காலத்தில் நடந்துசெல்ல தரைவிரிப்பான் உள்ளது. மழை நேரத்தில் பக்தர்கள் நடந்து செல்லும்போது வழுக்கி விழாதவகையில் பிடிப்புள்ள தரைத்தளமாக புதுப்பிக்கிறோம் என, இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.