முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கந்தசாமிபுரம் தெருமக்கள் சார்பில் மந்தைபிடாரி அம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழா நடந்தது.காலையில் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். மாலையில் கந்தசாமிபுரத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக சுந்தரலிங்கனார் சிலை வரை தெருமக்கள் கையில் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்து மலர்துாவி மரியாதை செலுத்தினர்.