பதிவு செய்த நாள்
13
அக்
2018
03:10
சத்தியமங்கலம்: ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவிலில், பிறந்த பெண் குழந்தை முதல், வயதான பெண்கள் வரை, அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு, நூற்றாண்டு காலமாக, வழிபாடு நடக்கிறது.
தமிழகம்-கர்நாடகா, மாநில எல்லையான, ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்து, கொங் ஹள்ளி வனம் உள்ளது. இங்கு மூன்று மலைகளுக்கு நடுவில், பாறை குகையில், மல்லிகார் ஜூன சுவாமி கோவில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு, சொந்தமான கோவிலில், பாறை குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக, லிங்கதுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.
இங்கு, 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில், ஆண்டுதோறும் குண்டம் விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம். இதனால் பெண்கள் அனைவரும், 2 கி.மீ., தூரத்தில் நின்று விடுவர். குண்டம் விழாவிலும் ஒரு சிறப்புண்டு. அதாவது தீ வார்க்கப்பட்டு, குண்டத்தில் மலர்கள் தூவப்படும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ்ந்து ஆராவாரம் செய்ய, பூசாரி மட்டுமே இறங்குவார். இதிலும், பூசாரியை தவிர, பக்தர்கள் தீ மிதிக்க கூடாது என்பது, ஐதீகமாக உள்ளது. இதனால்
குண்டத்தை, ஆண்கள் தொட்டு வணங்கி செல்வர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட, வயதான பெண்கள் வழிபட அனுமதியுண்டு. ஆனால், இங்கு, பெண் குழந்தை முதல், வயதான
பெண்கள் வரை, யாருமே செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.