பதிவு செய்த நாள்
13
அக்
2018
03:10
திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார் ஆகியோர் பல்வேறு பகுதிகளில், ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், திருப்பத்தூர் அடுத்த சின்ன சமுத்திரத்தில் வசிக்கும் முனிசாமி என்ற விவசாயி வீட்டில் இருந்த, மூன்று பழங்கால நாணயங்களை ஆய்வு செய்ததில், 15ம் நூற்றாண்டை சேர்ந்த, பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா காலத்திய செப்பு நாணயங்கள் என, தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: மூன்று நாணயங்களிலும், பெர்சிய மொழியில் அடில்ஷா பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் ஒரு பக்கம், இலை போன்ற அமைப்பிற்குள், ஒன்பது புள்ளிகள் காணப்படுகின்றன. இவை, பீஜப்பூர் சுல்தான்களின் அனைத்து நாணயங் களிலும் காணப்படுகின்றன. இப்புள்ளிகள் சுல்தான்களின் சின்னமாகும். வடக்கே பீஜப்பூரை தலைநகரமாக கொண்டு, ஆட்சி செய்தாலும், தமிழகத்தில் தஞ்சை பகுதிகள் இவரது ஆட்சிக்குப்பட்டு இருந்தன. 1646ல் விஜயநகர பேரரசின் அரசன் ஸ்ரீரங்கன், ஒரு போரில் தோல்வியடைந்தான். இதனால் தஞ்சை நாயக்கர்கள் பாதுகாப்பின்றி தவித்தனர். இதையறிந்த
சுல்தான் அடில்ஷா, தஞ்சை நாயக்கர்களுக்கு பாதுகாப்பளித்து, தனக்கு கப்பம் கட்டும்படி செய்தார். 1649ல், சுல்தான் படைகள் செஞ்சியை போரிட்டு வென்றன. தொடர்ந்து வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் சுல்தான் கட்டுப்பாட்டில் வந்தது. அந்த காலகட்டத்தில் வெளி யிடப்பட்ட நாணயங்கள்தான் இவை. இவ்வாறு அவர்கள் கூறினர்.