திருப்பதியில் கொட்டும் மழையில் கோவிந்தனைக் காண திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2018 01:10
திருப்பதி: திருமலையில் நடந்துவரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட வாகன உலா நேற்று நடைபெற்றது.
நான்கு நாட்களாக மலையில் வெயில் அடித்துவந்த நிலையில் கருட வாகன உலா நாளான்று காலை முதலே வானம் பக்தர்களுக்கு குடை பிடிப்பது போல மேகமூட்ட மாகவே இருந்தது. கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பசுவாமி நேற்று (அக்.,14ல்) இரவு 7 மணிக்கு உலா வரத்துவங்கியதும் மழையும் துவங்கியது. ஆனாலும் பக்தர்கள் மழைக்கு ஒதுங்காமலும் நின்ற இடத்தைவி்ட்டு நகராமலும் நீண்ட நேரம் நின்றபடி‛கோவிந்தா கோவிந்தா’ எனக் கோஷமிட்டபடி பெருமாளை தரிசித்தனர்.