திருவாடானை:திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தில்தூயஜெபமாலை ஆலய திருவிழா நடந்தது.முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நேற்று முன்தினம் (அக்., 13ல்) இரவு 9:00 மணிக்கு தேர்பவனி நடந்தது.
மெக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், தூயஜெபமாலை ஆகிய தேர்கள்முக்கிய வீதிகள் வழியாக சென்றன. ஓரிக்கோட்டை,சின்னக்கீரமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களைசேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.