பதிவு செய்த நாள்
16
அக்
2018
11:10
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஓர் அம்மன் கோவில், தசரா பண்டி கையை முன்னிட்டு, தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், விசாகப்பட்டினம் மாவட்டத்தில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
சமீபத்தில், இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலைக்கு, தசரா பண்டிகையையொட்டி, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன. மேலும், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால், கோவிலின் உட்புறம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.இது குறித்து, கோவில் நிர்வாகி, கொலுரு வெங்கடேஸ்வர ராவ் கூறியதாவது:இந்த கோவில், 140 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இங்கு வேண்டுவது நிறைவேறுவதால், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.ஆண்டுதோறும், நவராத்திரி பண்டிகையின் போது, கோவிலின் உட்புறம் மற்றும் அம்மன் சிலை இருக்குமிடம், புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்படும். இதில், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இடம்பெறும். இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும், பக்தர்கள் கொடுத்தவை. பண்டிகை நாட்களில் இவ்வாறு செய்வதால், வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு, அவர்கள், ரூபாய் நோட்டு களை தருகின்றனர். பண்டிகை முடிந்ததும், பக்தர்களிடமே, மீண்டும் ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.