பதிவு செய்த நாள்
16
அக்
2018
11:10
நவராத்திரியின் எட்டாம் நாளன்று, நம்மை காத்தருளும் தேவி, நரசிம்மி வடிவில் இருப்பாள். கரும்பு வில் பிடித்திருக்க, சுற்றிலும் அனிமா உள்ளிட்ட அஷ்ட சக்திகள் எழுந்திருக்க, கருணையுடன் தேவி இருக்கும் வகையில், கோவில்களில் அம்மனை அலங்காரம் செய்து வைத்திருப்பர். இந்த அலங்காரத்தில், அன்னையை நாம் வழிபட்டால், வேண்டிய எல்லா வரங்களும் கிடைக்கும்.
நவராத்திரியின் எட்டாம் நாளை, மகா அஷ்டமி எனக் குறிப்பிடுவது வழக்கம். இன்றுதான் துர்காதேவி அவதரித்த நாளாகும். ஹதுர்க்கம் என்றால், ஹஅகழி என்று பொருள். நம்மிடம் சத்ருக்களை நெருங்க விடாமல், அகழி போல் நின்று காப்பவள்.ஸ்ரீஆதிசங்கரர் அளித்த சவுந்தர்ய லஹரியில், 41வது பாடலை பாட வேண்டும். இந்த வழிபாட்டால் எதிரிகளால் துன்பம் வராமல் காப்பாற்றப்படுவர். அன்னையை, திரிசூலம் ஏந்தியவளாய், பாச அங்குசத்துடன் அலங்காரம் செய்து, மாக்கோலம் இட்டு, தாமரை மரிக்கொழுந்து மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பழ வகைகளை படைத்து வழிபட, நீண்ட ஆயுள் ஆரோக்கியம் உண்டாகும். கடன், சோகம், பிசாசு ஆகியவை அருகில் அண்டாது.
வழிபடுவது எப்படி?
கோலம்: காசுக்கோலம் போட வேண்டும். புதிய சில்லரைக் காசுகளைக் கொண்டு சிறிய பத்மம் கோலம் இடலாம். நட்சத்திர வடிவத்தில் கோலமிட்டால் சிறப்பு.
நெய்வேத்தியம்: காலையில் சித்ரான்னம் - தேங்காய் சாதம் உட்பட பலவகை அன்னங்கள் - பாயசம்
மாலையில் கொண்டக்கடலை சுண்டல்மலர்கள்: ரோஜா,மரிக்கொழுந்து,
தாமரைராகம்: புன்னாகவராளி
பாடல்: மணியே! மணியின் ஒளியே!
ஒளிரும் மணிபுனைந்தஅணியே!
அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்பிணியே!
பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!பணியேன் ஒருவரை
நின் பத்மபாதம் பணிந்த பின்னே!