Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி இராமர் கோயில் ... சபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ஆலோசனை கூட்டம் சபரிமலை விவகாரம்: இன்று (அக்., 16ல்) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா?
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா?

பதிவு செய்த நாள்

16 அக்
2018
12:10

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் மாற்றப்பட்டது மற்றும் மாயமானது தொடர்பான முக்கிய ஆவணங்களை, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப் பற்றி உள்ளனர்.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர் சன்னதியில், வாயில் பூவுடன் கூடிய லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை இருந்தது. அந்த சிலை மாற்றப்பட்டு, தற்போது, வாயில் பாம்புடன் கூடிய மயில் சிலை உள்ளது. அதே நேரத்தில், ராகு, கேது சிலைகள் மாயமாகி உள்ளன. அந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த,

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதையடுத்து, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, கபாலீஸ்வரர் கோவிலில் முகாமிட்டு, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பணிகள் முடிந்து, 2004ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தான், மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது; மற்ற இரு சிலைகள் மாயமாகி உள்ளன.

அந்த நேரத்தில், அறநிலையத் துறை இணை கமிஷனராக, திருமகள் இருந்தார். தற்போது, அவர் கூடுதல் கமிஷனராக உள்ளார். இரு தினங்களுக்கு முன், வியாசர்பாடியில் உள்ள திருமகள் வீட்டில், கூடுதல், எஸ்.பி., அசோக் நடராஜன், டி.எஸ்.பி., குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார்.

இதையடுத்து, கபாலீஸ்வரர் கோவிலில், திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம்

செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கைப்பற்றி, விசாரித்தனர். அப்போது, சிலைகளை மாற்றியது மற்றும் மாயமானது தொடர்பான, முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இது குறித்து, போலீசார் கூறுகையில், கபாலீஸ்வரர் கோவில் சிலைகள், முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் வீட்டில் இருக்கலாம் என்ற, தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar