பெண்களை மதிப்புடன் நடத்துங்கள். ஏனென்றால் அவர்களே உங்களின் தாய், மகள், மாமியாராகவும் இருக்கின்றனர். எவ்வளவு செல்வம் சேர்த்திருந்தாலும், இறைவனை சந்திக்கும் போது ஏழையாகவே இருங்கள். தம் உள்ளத்தை அறிந்த கொண்டவர்களே இறைவனை அறிந்து கொண்டவர்கள் ஆகிறார்கள். பிற மதத்தினரை துன்புறுத்துவது என்பது கடவுளை துன்புறுத்துவதற்கு சமமானதாகும். தண்ணீரில் உப்பு கரைந்து விடுவது போல. பாவங்களை நற்செயல்கள் கரைத்து விடும். மனைவியிடம் நல்லவராக இருப்பவரே உங்களில் நல்லவர். பொருளுக்காக மட்டும் நீங்கள் பேராசை கொண்டு, பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு, இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.