மகிஷாசுரனை அம்பிகை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. இந்நாளில் மேற்கு வங்காளத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை, காளி சிலைகளை வழிபடுவர். பூஜை முடிந்ததும் சிலைகளைக் கடலில் கரைத்து விடுவர். அப்போது மீண்டும் அடுத்த ஆண்டு நவராத்திரிக்கு தங்கள் வீட்டுக்கு அம்பிகை எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்வர்.