மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமியன்று வழிபட்டு அதன் இலைகளை பறிப்பர். இம்மரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் இந்த இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து வணங்குவர். ஆண்டு முழுவதும் வளமுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் பெரியவர்கள் அந்த இலைகளை எடுத்து ’இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி கொடுப்பர்.