* பொறுமை, நம்பிக்கை என்னும் இரண்டு காணிக்கைகளை மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். * கடவுளைத் தேடுவது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். * கடவுளை தேடி எங்கும் அலைய வேண்டாம். எல்லா உயிர்களிலும் அவர் இருக்கிறார். * கடவுளைத் தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே சாத்தியமாகும். * கடவுள் மீது முழு கவனத்தையும் செலுத்து. துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். * உலகத்தின் ஏகபோக உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. * வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவு நிறைந்த மனம் மட்டுமே போதும். * முன்னேற வேண்டுமானால், விரதம் இருக்க வேண்டாம். கடவுளைச் சரணடைந்தால் போதும். * எல்லோரையும் நேசியுங்கள். யாரிடத்திலும் பகையுணர்வு வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே. * உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் கடவுள் அறிவார். * ஆணவம் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள். * எளிமையாக வாழுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளில் ஈடுபடாதீர்கள். * உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி கவலைப்படாதே. உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம். * மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணியங்களே. * எதிரில் உள்ளவர் பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசுங்கள். * உண்மை எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம். குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். * அவர்களை அழச்செய்து பெரும்பாவத்திற்கு ஆளாகாதீர்கள். உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம். * பணம் எவ்வளவு இருந்தாலும், செய்த வினைகளின் பயனை அனுபவித்தே ஆக வேண்டும். * பொறுமை, பக்தியை ஒருபோதும் கைவிடாதீர். அதற்கான பலன் தாமதமாகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது. - சொல்கிறார் ஷீரடி பாபா