பதிவு செய்த நாள்
17
அக்
2018
11:10
கோவை:தர்ம ரக் ஷண சமிதி சார்பில், சரஸ்வதி நாம ஜெப வேள்வி, ஒப்பணக்கார வீதி, ஸ்ரீ அத்தி விநாயகர் கோவிலில், வரும் 19ம் தேதி வரை காலை 6:00 மணிக்கு நடக்கிறது.
ஆனைக்கட்டி, ஆர்ஷ வித்யா குருகுலம் கீழ் இயங்கும், தர்ம ரக் ஷண சமிதி சார்பில், ஏழாம் ஆண்டு, சரஸ்வதி நாம ஜெப வேள்வி நடக்கிறது. மூன்றாம் வகுப்பு முதல், கல்லூரி மாணவர்கள் வரை, இவ்வேள்வியில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். வேள்வியில் பங்கேற்போர், காலை 5:50 மணிக்கு கோவிலினுள் இருக்க வேண்டும். விபரங்களுக்கு, 98430 55329/ 98422 28538 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.