பதிவு செய்த நாள்
17
அக்
2018
11:10
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது பள்ளி கொண்டீஸ்வரர் கோவில். இக்கோவிலில், நடைபெறும் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழா பிரசித்தி பெற்றது.கடந்த 10ம் தேதி துவங்கி, தினமும், உற்சவர் அம்மன் பல்வேறு அலங்காரங் களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் (அக்., 15ல்), துர்காதேவி அலங்கார த்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று (அக்.,16ல்), அன்னை பார்வதி, சிவபெருமானை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வரும், 19ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், உற்சவர் அம்மன், பள்ளிகொண்டீஸ் வரர், ஞானசரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முன்னதாக, காலை, மாலை, அன்னை மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை காட்டப்படும்.