பதிவு செய்த நாள்
18
அக்
2018
03:10
பழநி,: நவராத்திரி விழாவில், நாளை அம்பு போடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு மேல் ரோப் கார், வின்ச் இயங்காது.பழநி முருகன் கோவிலில் நவராத்திரி விழா, அக்., 9ல் முதல், 19 வரை நடக்கிறது. விழாவில் நாளை விஜயதசமி அன்று அம்பு, வில் போட்டு சூரன்வதம் நடக்கிறது. இதற்காக மலைக்கோவிலில், மதியம், 12:00 மணி உச்சிக்கால பூஜைக்கு பின், மதியம், 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடத்தப்படும். மதியம், 2:30 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்ட உடன், சன்னதி நடை சாத்தப்படும்.இதனால், காலை, 11:00 மணிக்கு மேல் ரோப்கார், வின்ச் இயங்காது. பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து, பராசக்தி வேலுடன், தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பட்டு, கோதைமங்கலம் சிவன் கோவிலில் அம்பு போட்டு, சூரன்வதம் நடக்கிறது.