பதிவு செய்த நாள்
19
அக்
2018
03:10
விடாமுயற்சியால் முன்னேறும் சிம்ம ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரன், கேது ஆகியோர் சாதகமாக இருந்து நன்மை தருகின்றனர். அக்.24 முதல் நவ.13 வரை புதனும் நன்மை தருவார். செவ்வாய் அக்.27 வரை நற்பலன் அளிப்பார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். செயலில் அனுகூலம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேதுவால் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். சுக்கிரனால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.அக்.23க்கு பிறகு பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவ.2,3ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக். 29,30ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் ஆனால் நவ. 9,10ல் உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் மாதத் தொடக்கத்தில் புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.
பணியாளர்களுக்கு சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். தனியார் துறையில் இருப்பவர்கள் வளர்ச்சி காண்பர். அக்.23க்கு பிறகு வேலைப்பளு குறையும். இடமாற்ற பீதி மறையும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். அரசு ஊழியர்கள் பிரச்னையில் இருந்து விடுபடுவர். விண்ணப்பித்த கடனுதவி எளிதில் கிடைக்கும். அக். 27,28 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.
வியாபாரத்தில் சூரியனால் கூடுதல் லாபம் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். புதனால் பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன அக்.23க்கு பிறகு மறையும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.31, நவ.1,4,5 ல் சந்திரனால் சிறுதடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அக்.18,19, நவ.13,14,15ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சனி, ராகுவால் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் மாதத் தொடக்கத்தில் எதிர்பார்த்த பதவியை பெறலாம். மக்கள் மத்தியில் கவுரவமுடன் இருப்பர். தொண்டர்களின் வகையில் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. அக் 27க்கு பிறகு பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. நவ. 11,12 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் அக்.24 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அக்கறையுடன் படிப்பது அவசியம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். அதன்பின் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனைக் காண்பர். நெல், சோளம், பழ வகைகளில் எதிர்பார்த்ததை விட கூடுதல் மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சற்று கவனம் தேவை. புதிய சொத்து அக்.27க்குள் வாங்குவது நல்லது. அதன் பிறகு வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் மாத முற்பகுதியில் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். அக். 23க்கு பிறகு குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். நவ.6,7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப்பெறலாம். அக்.20,21,நவ.16 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.
பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர் வழியில் பணஉதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும்.
* நல்ல நாள்: அக்.18,19,20,21,27,28,29,30, நவ.2,3,6,7,8,13,14,15,16
* கவன நாள்: அக்.22,23 சந்திராஷ்டமம்
*அதிர்ஷ்ட எண்: 7,3,9
* நிறம்: சிவப்பு, வெள்ளை
* பரிகாரம்:
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை
● ஞாயிறன்று ராகுகாலத்தில் காளி வழிபாடு
● சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை