மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வெற்றி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2018 03:10
மனதாலும் பிறருக்கு தீங்கு எண்ணாத மகர ராசி அன்பர்களே!
புதன் அக்.23ல் இடம் மாறினாலும் சாதகமாக காணப்படுகிறார். சூரியன், குரு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். நினைத்தது நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதி வாய்ப்பு பெருகும். பணப்புழக்கம் கூடும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். அக்.23ல் இருந்து நவ. 13 வரை பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். அக்.31, நவ.1ல் சகோதர வழியில் நன்மை எதிர்பார்க்கலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அக்.24,25,26ல் உறவினர் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் நவ. 9,10ல் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்.27க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம் கவனம்.
பணியாளர்களுக்கு குருவால் மேன்மை உண்டாகும். சிலருக்கு புதிய பதவி கிடைக்க யோகமுண்டு. சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நவ.6,7,8 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். எதிலும் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். அக். 27க்கு பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்காக வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். பங்கு வர்த்தகம் மூலம் விரும்பிய லாபம் கிடைக்கும். சகதொழிலதிபர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நவ.3க்கு பிறகு எதிர்பார்த்ததை விட லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வளர்ச்சி பெறும். சந்திரனால் அக்.20,21, நவ.11,12,16ல் பண விரயம் ஏற்படலாம். முயற்சியில் தடை குறுக்கிடலாம். அக்.29,30ல் எதிர்பாராமல் பணவரவு கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உண்டாகும். சனி,ராகுவால் சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழல் ஏற்படலாம். அக்.27க்கு பிறகு சிலர் அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பகைவரால் தொல்லை குறுக்கிட்டாலும் குருவால் எளிதில் முறியடிப்பீர்கள்.
கலைஞர்கள் மறைமுகப் போட்டிக்கு ஆளாவர். புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். சிலர் ரசிகர்களின் மத்தியில் அவப்பெயரைச் சந்திக்கலாம் கவனம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களுக்காக அதிக பணம் செலவு செய்யலாம். மக்கள்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. அக்.27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் புதனால் நன்மை காண்பர். நற்செயலில் ஈடுபட்டு பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவர்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கப் பெறுவர். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். நெல், மஞ்சள் கோதுமை, சோளம் போன்ற பயிர்களில் சீரான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வீட்டுக்கு தேவையான வசதி வாய்ப்பு கிடைக்கும். அண்டைவீட்டார் அனுகூலமாக செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு புதனால் லாபத்துக்கு குறைவிருக்காது. அக்.22,23ல் நன்மையை எதிர்பார்க்கலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. அக்.31, நவ.1ல் விருந்து, விழா என செல்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். நவ.4,5ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
* நல்ல நாள்: அக்.18,19,22,23,29,30,31, நவ.1,6,7,8,9,10,13,14,15 * கவன நாள்: நவ.2,3 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 1,9 * நிறம்: பச்சை, சிவப்பு
* பரிகாரம்: ● கார்த்திகையன்று முருகனுக்கு பாலபிேஷகம் ● பவுர்ணமியன்று கிரிவலம் வருதல் ● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »