பதிவு செய்த நாள்
19
அக்
2018
03:10
நல்லவர் நட்பை விரும்பி ஏற்கும் மீன ராசி அன்பர்களே!
புதன் அக்.23 வரையும், நவ.13க்கு பிறகும், செவ்வாய் அக்.27 வரையும் நன்மை தரக் காத்திருக்கின்றனர். குரு,சுக்கிரன்,கேது மாதம் முழுவதும் நன்மை தருவர். அவர்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் மேலோங்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். மாதத் தொடக்கத்தில் வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். அவர்களால் பெருமை காண்பீர்கள். அக்.24ல் இருந்து நவ.13 வரை புதனால் வீண்பிரச்னை உருவாகலாம். மற்றவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். சுக்கிரனால் வசதிவாய்ப்பு பெருகும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். குறிப்பாக அக்.22,23ல் அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்.18,19, நவ.13,14,15ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
அரசாங்க பணியாளர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். மாத முற்பகுதியில் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.23க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு வேலையில் பொறுமை தேவைப்படும். பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். வழக்கமான சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. நவ.11,12ல் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். நவ.13க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.
தொழில், வியாபாரத்தில் அரசாங்க வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.25,26ல் சந்திரனால் தடைகள் வரலாம். நவ.2,3ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு சகபெண் கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். அக்.27க்கு பிறகு பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும். அக்.31, நவ.1ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
விவசாயிகள் போதிய வருமானம் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு வருமானம் வரும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. அதே நேரம் அக்.27க்கு பிறகு அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும். அக்.24 முதல் நவ.13 வரை படிப்பில் மெத்தனமாக இருப்பது கூடாது. யாரிடமும் அனாவசியமாக பழக வேண்டாம்.
பெண்களுக்கு குருவால் ஏற்பட்ட பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நவ.4,5 சிறப்பான நாட்களாக அமையும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். அக்.27,28ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரலாம். அக்.24ல் இருந்து நவ.13 வரை குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். நவ.13க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கை நிறைவேறும். உடல்நலம் சீராக இருக்கும். செவ்வாயால் வீண்விரயம் ஏற்படலாம்.
* நல்ல நாள்: அக்.18,19,22,23,27,28, நவ.2,3,4,5,11,12,13,14,15
* கவன நாள்: நவ.6,7,8 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
* பரிகாரம்
● ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
● தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
● சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை