வைத்தீஸ்வரன் கோயில் பள்ளியில் அக்ஷர அபியாச திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2018 10:10
நாகை: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி திருநாளை முன்னிட்டு அக்ஷரபியாச திருவிழா நடைபெற்றது. இ தனையொட்டி அப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் மற்றும் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள் நன்கு கல்வி கற்க வேண்டி ஸ்ரீ சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரா தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் சரஸ்வதி அருளுடன் கல்வியை ஆரம்பிக்கவும், அவர்களுக்கு வார்த்தைகள் சுத்தமாக வரவேண்டியும் பூஜிக்கப்பட்ட தேன், பால் மற்றும் தினை மாவில் நனைத்த தங்க எழுத்தாணியை கொண்டு முதல் எழுத்தான அ வை எழுதியதுடன், வெள்ளி எழுத்தாணியால் வெள்ளித்தகட்டிலும், பின்னர் தரையில் பர ப்பிவைக்கப்பட்ட நெல்மணிகளிலும் குழந்தைகளை எழுதச்செய்தனர். பள்ளி தாளாளர் சிவசங்கர், தலைமை ஆசிரியர் ஜேக்கப்ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் நாவில் எழுத்தாணி கொண்டு எழுதினர். இதில் திரளான குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.