பதிவு செய்த நாள்
20
அக்
2018
02:10
கிருஷ்ணராயபுரம்: தேவச்சகவுண்டன்புதூர் வேடிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள், மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்துக் கொண்டு கோவிலு க்கு சென்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சேங்கல் அருகே, தேவச்சகவுண்டன் புதூரில், வேடன் வேடிச்சி அம்மன் கோவில், மூன்று நிலை கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபி ஷேகம் முன்னிட்டு, நேற்று (அக்., 19ல்) காலை மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர் கள் கலந்து கொண்டனர். வரும், 21 காலை, 8:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.