* உண்மையின் பாதையில் செல்பவனுக்கு, உபதேசம் தேவையில்லை. எல்லா நற்குணங்களும் தேடி வரும். * அடக்கம் இல்லாத துறவியை விட, அடக்கமுடன் வாழும் இல்லறத்தான் மேலானவன். * பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிக்காமல், சொர்க்கத்தில் யாரும் நுழைய முடியாது. * ’எனக்கு மரணமில்லை’ என யாரால் சொல்ல முடியுமோ, அவர் மட்டுமே அடுத்த நாளின் மீது ஆசை வைக்க முடியும். * கோபம் அன்பை அழிக்கிறது; ஆணவம் அடக்கத்தை அழிக்கிறது; பொறாமை நற்குணங்கள் அனைத்தையும் அழிக்கிறது. * வேரிலிருந்து மரமும், அதிலிருந்து கிளைகளும் வருவது போல, அடக்கத்திலிருந்து தர்மமும், அதிலிருந்து நற்பண்புகளும் வருகின்றன. * எல்லோருக்கும் துன்பம் நேர்கிறது என்ற உண்மையை உணர்பவனே அறிஞன். * தியானத்தின் மூலம் அறிவை தூய்மையாக்கிக் கொண்டால், கொடிய துன்பத்தையும் எளிதாக கடக்கலாம். * புல்லின் மீது படந்திருக்கும் பனித்துளி போல மனித வாழ்வு நிலையில்லாதது. * உயிர்களைக் கொல்லவோ அல்லது அதற்கு உடன்படவோ கூடாது. மீறினால் தீராத பாவத்திற்கு ஆளாக நேரும். - மறுக்கிறார் மகாவீரர்