சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 5 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மூடப்பட்டது. சபரிமலைக்கு அனைக்கு வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நடை திறக்கப்பட்ட 5 நாட்களும் சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல எடுத்த முயற்சியை ஐயப்ப பக்தர்கள் தடுத்தி நிறுத்தினர். இந்நிலையில் சபரிமலை விவகார சீராய்வு மனுக்களை விசாரிப்பது குறித்த அறிவிப்பை, சுப்ரீம் கோர்ட் இன்று(அக்.,23) வெளியிடவுள்ளது.