கோவில் விழாவில் வினோதம்: சேறு பூசி வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2018 11:10
திருப்பூர்: அவிநாசி அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் சேறு பூசி, அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அவிநாசியை அடுத்த குட்டகத்தில், அத்தனுார் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. கோவிலிலில் அம்மன் திருக்கல்யாண உற்சவ விழா கடந்த 13ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 14ம் தேதி கம்பம் நடுதல், தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் முன்னிட்டு முளைப்பாலிகை, மாவிளக்கு ஆகியன எடுத்தும், பொங்கல் வைத்தும் பெண்கள் வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. உலக நலன் வேண்டியும், மழை வளம் பெருகவும் ஆண் பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் உடலில் சேறு பூசிக் கொண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர் இன்று மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது.