பதிவு செய்த நாள்
23
அக்
2018
12:10
சபரிமலை:சபரிமலை ஐப்பசி மாத பூஜையின் ஐந்தாம் நாளான நேற்று (அக்., 22ல்) தரிசனத் துக்கு சென்ற ஐந்து பெண்களும் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பி சென்றனர். நேற்று (அக்.,22ல்) இரவுடன் நடை அடைக்கப்பட்டது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தால் கேரளாவின் மாடலிங் அழகி ரஹானா பாத்திமா, ஆந்திரா தனியார் டிவி நிருபர் கவிதா உள்ளிட்ட சிலர் செல்ல முயன்றனர்.
பக்தர்கள் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப் பட்டனர். தினமும் சில பெண்கள் வருவது, போலீசார் அழைத்து வருவது என நாடகம் அரங்கேறி வந்தது. நேற்றும் கேரளா நெடுங்குன்றத்தை சேர்ந்த பிந்து டி வாசு, 35, என்ற பெண் சன்னிதானம் செல்வதற்காக எருமேலியில் போலீ சாரிடம் அனுமதி கோரினார்.
பஸ், போலீஸ் ஜீப் என மாறிமாறி அவரை போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் பக்தர்கள் மறித்தனர். இறுதியில் சபரிமலை செல்லவில்லை என போலீ சாரிடம் தெரிவித்தார். எனினும் நெடுங்குன்றத்தில் நடக்கும்போராட்டத்தால் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் மாலை வரை போலீசார் தவித்தனர்.
நீலிமலை வரை... இதுபோல ஆந்திராவில் இருந்து நான்கு பெண்கள், சக பக்தர்களுடன் வந்தனர். இதில் மூன்று பேர், பக்தர்களின் எதிர்ப்பால் பம்பைக்கு முன்பே திரும்பி சென்று விட்டார்.
ஒருவர் மட்டும் தலையை துணியால் மூடியபடி நீலிமலை வரை வந்தார். அங்கு பக்தர்கள் மறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அவரும் பம்பை திரும்பினார். தீர்ப்பு வந்த பின் ஐந்து நாட்கள் நடை திறந்திருந்த நிலையில் 15 பெண்கள் சபரிமலை வந்து தரிசனம் நடத்த முடியாமல் திரும்பினர். ஆயிரக்கணக்கான போலீசார் இருந்தும் ஒருவரை கூட தரிசிக்க செய்ய முடியவில்லை.
* இந்த விஷயத்தில் அரசு இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறது. ஒருபுறம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்; மறுபுறம் எந்த சமரசத்துக்கும் தயாராகாத பா.ஜ., ஏற்படுத்தும் கலவரம்.
* லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ., செயல்படுகிறது. தற்போதைய நிலைபற்றி நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க தேவசம்போர்டு எடுத்த முடிவு சரியே. கடகம்பள்ளி சுரேந்திரன் தேவசம்போர்டு அமைச்சர்