ஒரு குதிரையில் இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். ஒருவன் குதிரையை ஓட்ட, பின்னால் இருந்தவன் ஒரு படுக்கையை சுருட்டி கையில் வைத்திருந்தான். அதைப் பார்த்தவர்கள், குதிரையை ஓட்டுபவன் எஜமானன் போலும்! படுக்கையை வைத்திருப்பவன் வேலைக்காரன் என்று நினைத்தார்கள். கொஞ்சதுõரம் சென்றதும், ஒரு சத்திரத்திற்குள் அவர்கள் நுழைந்தனர். குதிரையை ஓட்டியவன், அதை சற்று ஆசுவாசப்படுத்தி, கொள்ளும் தண்ணீரும் வைத்தான். பின்னால் அமர்ந்து வந்தவன், கொண்டு வந்த படுக்கையை விரித்து துõங்க ஆரம்பித்தான். சத்திரத்தில் தங்கியிருந்தவர்கள் இதைப் பார்த்து, “துõங்குபவன் எஜமானன் போலும்! குதிரையைக் கவனிப்பவன் பணியாளன் என்று நினைத்தனர். உலகத்தின் பார்வை எப்போதுமே இப்படித்தான் இருக்கும். எதைப்பற்றியும் தீர விசாரித்து தெரிந்து கொள்ளாது. சந்தேகம் என்ற போர்வைக்குள் சிக்கியிருப்பதே உலகம். ஆனால், மாணவர்கள் இப்படி இருக்கக்கூடாது. உங்கள் பாடங்களில் என்ன சந்தேகம் வந்தாலும் சரி...நீங்கள் ஆசிரியர்களிடமும், நன்றாகப் படிக்கும் சக மாணவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டால், ‘இமேஜ்’ பாதிக்கப்படுமோ, முட்டாள் என சித்தரித்து விடுவார்களோ என்ற தயக்கமே வேண்டாம். சந்தேகம் இல்லாத கல்வி தான் உங்கள் வாழ்வை உயர்த்தும்.