பதிவு செய்த நாள்
24
அக்
2018
10:10
திருநெல்வேலி: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தாமிரபரணி நதியில் அக்.,11ல் துவங்கிய மகாபுஷ்கர விழா நேற்று நிறைவடைந்தது. நேற்றும் பாபநாசம் துவங்கி அத்தாளநல்லுார், திருப்புடமருதுார், நெல்லை தைப்பூச மண்டபம்,குறுக்குத்துறை, மணிமூர்த்தீஸ்வரம், செப்பறை கோயில், துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு, அகரம், ஸ்ரீவை குண்டம் என படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் நீராடினர்.
திருநெல்வேலி தைப் பூசமண்டபத்தில் நடந்த ஆரத்தியில் வேளாக்குறிச்சி ஆதினம் சத்யஞான மகாதேவதேசிகர், செங்கோல் ஆதினம் சிவப்பிரகாச தேசிய சத்யஞான சுவாமி, சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகள், வி.எச்.பி., மூத்த தலைவர் வேதாந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலியில் தைப் பூசமண்டபம், குறுக்குத்துறையில் புஷ்கரவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துஅனுமதி பெற்றே விழா நடந்தது. புஷ்கரத்தை முன்னிட்டு நடந்த எந்த விழாக்களிலும் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. நிறைவு நாளான நேற்று, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த இடத் திலேயே அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக தாமிரபரணிக்கு ஆரத்தி நடந்தது. தைப் பூசமண்டபத்தில் ஏராளமானோர் கூடினர்.