பழநி:பழநியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, வழங்கிய இலவச துணிப் பைகளை விற்பனை செய்ததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பழநி முருகன் கோயிலைச் சேர்ந்த கல்லூரிகள், பள்ளிகள் சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கிரிவீதியில் பக்தர்கள், பொதுமக்களிடம் இலவசமாக துணிப்பைகள் வழங்கப்பட்டது. அப்போது சில கிரிவீதி ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் மொத்தமாக இலவச துணிப்பைகளை வாங்கினர். நிகழ்ச்சி முடிந்தபின் இலவச துணிப்பைகளை கடைகளில் வைத்து விற்பனை செய்தனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தின் நோக்கம் பொதுமக்களை சென்றடையாமல் பெயரளவில் நடத்தப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.