பட்டிவீரன்பட்டி சித்தரேவு பெருமாள் கோயில் நிலங்கள் மீட்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2018 02:10
பட்டிவீரன்பட்டி: "சித்தரேவு வரதராஜப் பெருமாள் கோயில் நிலங்களை மீட்டு கோயிலைப் புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆத்தூர் தாலுகா சித்தரேவில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 600 ஆண்டுகள் பழைமை யான வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்த மான இக்கோயிலில் பல அபூர்வ ஐம்பொன் சிலைகள் உள்ளன. சுற்றுச் சுவர் சேத மடைந்துள்ளதால் 3 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் கொள்ளை சம்பவம் நடந்தது. பலர் கோயிலின் உள்புறத்தில் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இந்த கோயிலுக்கு 1977 ஆம் ஆண்டு திருப்பணிகள் நடந்துள்ளது. அதன் பின் புதிதாக ராஜகோபுரம் கட்டி வண்ணம் பூசாமல் சிமென்ட் வேலைப்பாடுகளுடன் பணிகள் பாதியில் நிற்கிறது. இதனால் இந்த ராஜகோபுரம் பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது. மூலவர் கோபுரத்திலும் பழங்கால சிலைகள் பல சிதிலமடைந்துள்ளன. கோயில் கிணறு தூர் வாரப்படாமல் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. கடந்த 2001ல் கிராம கோயில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 32 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது தேர்தல் வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. கோயிலுக்குச் சொந்தமான 120 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 120 ஏக்கர் நிலம் இந்த கோயிலுக்கு சொந்தமாக இருந்தும் ஒரு ஏக்கர் நிலம் கூட கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.
அறநிலையத்துறையும் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பலர் இந்த நிலங் களை பட்டாமாறுதல் செய்துள்ளதாக தெரிகிறது. இரு நாட்களுக்கு முன்பு, "கோயில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும்.
தமிழகத்தில் அறநிலையத்துறை கோயில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.இதனைப் பயன்படுத்தி சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் நிலங்களை அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து மீட்க வேண்டும்.ஒரு கால பூஜைக்கே சிரமமப்படும் இக்கோயிலில் 3 கால பூஜைகள் மற்றும் திருப்பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.