பதிவு செய்த நாள்
29
அக்
2018
10:10
திருச்சி: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் திருப்பணிகள் முடிந்துள்ளதால், டிசம்பர் மாதம் இரண்டு கட்டமாக கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்கும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதால், டிசம்பர், 9 மற்றும் 12ம் தேதிகளில், 2 கட்டமாக கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. டிசம்பர் 9ம் தேதி காலை 8:15 மணிக்குள், பரிவார தெய்வங்களுக்கும், விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக, டிசம்பர், 12ம் தேதி, 7 மணிக்கு மேல், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகளுக்கும், கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, நேற்று முன் தினம் மாலை, கோவில் வளாகத்தில் வெளி நடராஜர் சன்னதியில், பாலாலயம் செய்வதற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கின. நேற்று, 45 உப சன்னதிகளிலும் பாலாலயம் செய்யப்பட்டது. பாலாலய பூஜையில் அமைச்சர் வளர்மதி, அறங்காவல் துறை உதவி கமிஷனர் ஜெயப்ரியா மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.