ராமேஸ்வரம் கோவிலில் புதிய தீர்த்தங்கள் பிரதிஷ்டை: பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2018 11:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று 5 புதிய தீர்த்தக்கிணறுகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் புனித நீராடினர்.ராமநாத சுவாமி கோயிலில் பழைய தீர்த்தக்கிணறுகளுக்கு பதிலாக புதிய தீர்த்தக்கிணறுகள் ஏற்படுத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், 2 முதல் 6 வரை தீர்த்தக் கிணறுகளை கோயில் நிர்வாகம் மூடியது. பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி, கோயிலின் 2ம் பிரகாரத்தில் 6 தீர்த்தக்கிணறுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது.முதல் தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்ய நேற்று காலை 5 புனித தீர்த்தகலசங்களை கோயில் குருக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து காலை 9:30 மணிக்கு, புதிய தீர்த்தக்கிணற்றில்புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் மங்கையற்கரசி,மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிய இடத்தில் தண்ணீர் இறைக்க உத்தரவு கடிதம் கொடுத்தால்தான், பக்தர்களுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவோம், என யாத்திரை பணியாளர்கள் கோரிக்கைவிடுத்தனர்.கோயில் அதிகாரிகளின் சமரச பேச்சில் தீர்வு ஏற்பட்டு, 2 மணி நேரம் தாமதமாக தண்ணீர் இறைத்து ஊற்றினர்.