Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸன்யாஸ ஆச்ரமம் வாங்கிக்கொண்டது வாழ்வில் நிம்மதி பெற ஸ்வாமிகள் ...
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
ஸ்வாமிகளின் தீர்மானங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
03:10

ஸ்வாமிகள், மஹரிஷி க்ரந்தங்களில் மனிதன் எப்படியிருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறதோ, அதன்படி இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ப்ரசாரம் செய்து வந்ததோடல்லாமல்  தானே பின்பற்றியும் வந்தவர். எந்த ஒரு விஷயத்தையும் ஸ்வாமிகள் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்த பிறகே உபதேசம் செய்வார். ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லியிருக்கிறபடி பக்தி செய்தால் தான் சாந்தி உண்டாகும் என்று சொல்லுவார்.

தனக்கு எவ்வளவோ சிரமங்கள் வந்தபோது பரிகாரம் தேடாத ஸ்வாமிகள் அவரைத் தேடி வரும், துயரத்தில் மூழ்கியிருக்கும், ஜீவன்களுக்குக் கருணையுடன் பரிகாரத்தை உபதேசிப்பார். ஸ்வாமிகள் சொல்லும் பரிகாரம் பண சிரமமோ, உடல் சிரமமோ கொடுக்காமல் மிகப் பெரிய பலனை மட்டுமே கொடுக்கும். ஸ்வாமிகள் பகவன் நாம ஜபத்தையோ அல்லது ச்லோக பாராயணத்தையோ, பரிகாரமாகச் சொல்வது வழக்கம். தான் எவ்வளவோ அஸாத்யமான விஷயங்களை அனுஷ்டித்தாலும் கூட, பிறத்தியாருக்கு சொல்லும் பொழுது மிகவும் எளிதான விஷயங்களைக் கொஞ்சம் கூட கர்வத்தின் சாயலே இல்லாத கருணையுடன் எடுத்துச் சொல்வார். ஸ்வாமிகளின் கருணையையும், இரக்கத்தையும் வார்த்தைகளால் விவரிப்பது கடினமே! அனுபவித்தவருக்கே தெரியும்.

ஒருவருடைய மனதுக்கு நிம்மதியை பகவத் விஷயமான தன் உபதேசத்தினாலும், காரியங்களாலும் கொடுப்பது என்கிற செயல் மற்ற எல்லா தர்மங்களுக்கும் மேல் என்று சொல்லுவார். இவர் ப்ரவசனங்களில் மனிதர்களை ஸ்தோத்திரம் செய்ததில்லை. மூலத்தில் உள்ளதை உள்ளபடி தன்னை மறந்து சொல்லிக் கொண்டே போவார்.

தன்னை அண்டி வருபவர்களிடம் உலக விஷயங்களை பேசாமல் பகவத் விஷயங்களைப் பற்றி மட்டும் பேசுவார். வருபவர்களுக்கு நேரம் இருக்கும் பக்ஷத்தில் ஸ்ரீமந் நாராயணீய படனம் செய்வார், அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் தகுதிக்கு ஏற்றாவாறும் பூஜை அல்லது நாம ஜபம் அல்லது ஸ்தோத்திர பாராயணம் இவைகளை உபதேசிப்பார். தன்னை அடிக்கடி வந்து பார்ப்பதை விட இந்த பகவத் பஜனத்தை விடாமல் தினம் செய்து வருவது தான் மேல் என்பார்.

பாராயணம் ப்ரவசனம் முதலியவைகளுக்கு விலை வைக்கமாட்டார். சாமான்கள் லிஸ்டும் நைவேத்யம் என்ற பெயரில் போடமாட்டார். தானே நைவேத்யத்திற்காக டைமண்ட் கல்கண்டு எடுத்துக் கொண்டு வந்து விடுவார். யாராவது நைவேத்யத்தைப் பற்றி அவரிடம் கேட்டால் ‘தங்கள் வீட்டில் எப்படி சவுகரியமோ அப்படி!’ என்று சொல்லி விடுவார். ஒருவர் வீட்டிற்கும் பாராயணமில்லாமல் செல்லமாட்டார். இவர் ஸ்ரீமத் சுந்தரகாண்ட, ராமாயண, பாகவத பாராயணம் செய்து எவ்வளவோ குடும்பங்களில் விவாஹம், தம்பதிகளுக்குள் வேறுபாடு முதலிய பிரச்சனைகள் சரியாகி இருக்கின்றன. இவ்வாறு நடப்பதை ஸ்வாமிகள் தனக்கு ஒரு பெருமையாகக் கருதாமல் அந்த க்ரந்தங்களுக்கு சக்தி இருக்கிறதென்றும் கேட்பவர்களின் நம்பிக்கையைப் பொறுத்துப் பலன் கிடைக்கிறது என்றும் சொல்லுவார்.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar