திருச்செந்தூர்:திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் இதிருச்செந்தூர் கோயிலில் நாளை தை உத்திர வருஷாபிஷேகம் நடக்கிறது. முருகன் கோயிலில் மூலவர் விக்ரகம் கடந்த 1909ம் ஆண்டு தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் தை உத்திர நட்சத்திரம் அன்று வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு நாளை (11ம் தேதி) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் தை உத்திர வருஷாபிஷேகம் நடக்கிறது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நாளை காலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பெருமான் மற்றும் அம்பாள் திருவீதி உலா வருகின்றனர். நாளை இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. இந்த புஷ்பாஞ்சலியில் பங்கு பெற பக்தர்கள் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாக கேந்தி பூக்கள் தவிர மற்ற மலர்களை உள்துறை கண்காணிப்பாளர் வசம் கொடுக்கலாம். மேற்கண்ட தகவலை கோயில் இணை ஆணையர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.