Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 22. ரதஸப்தம் ஸ்நானமந்த்ரம்
22. ரதஸப்தம் ஸ்நானமந்த்ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
04:11

முன்னொரு காலத்தில் ராஜா ஒருவருக்கு நீண்ட நாள் பிள்ளைச் செல்வம் இல்லாமல் இருந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை பிறந்தது முதல் வளர வளர நாளொரு நோயும், பொழுதொரு கண்டமாக தினம் தினம் இறந்து பிழைப்பதாக நடந்து வந்தது.

அரசன் ஜோதிட நிபுணர்கள் மூலம் அவள் ஜாதகப் பலனை அறிந்தான். ஜோதிடர்களும் இவள் போன ஜென்மத்தில் நல்ல குலத்தில் பிறந்தாலும், குலப் பெருமையைக் காக்காமல், வைஷ்யன் ஒருவனுடன் உறவுகொண்டு, அவன் இறந்தபின் அவன் மனைவியைப் படாதபாடுபடுத்தி, அவளுடைய சொத்து, நகைகள், உரிமைகள் பலவற்றை அபகரித்து அவளை அடிமையைப்போல் நடத்தியுள்ளதுடன், மேலும் பல பாபங்கள் செய்திருக்கிறாள். இருந்தாலும் அவள், ரத ஸதப்தமி விரதம் செய்தவர்களைப் பார்த்து நாமும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று மனத்தளவில் நினைத்தவள் ஆதலால், இப்பிறவியில் ராஜாவான உங்கள் வயிற்றில் பிறந்து பாபங்களைத் தொலைத்து நற்கதி அடைய அவளது கிரகங்கள் அமைந்துள்ளது. திருமணமாகியும் அவள் கணவருடன் சேராமல் நோய்வாய்படுவது என்பது, போன ஜென்மத்தில் வைஷ்யனை மயக்கி, அவன் தன் மனைவியைப் பார்க்காமல், பேசாமல் செய்ததினால் வந்த கர்மவினையேயாகும். அதனால் இவ்விரதத்தை அவளுக்கு செய்து வைத்து பூர்த்திசெய்தால் அவள் பாபம் விலகி, சிறப்பாக நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் சவுமாங்கல்யத்துடன் புத்திரர் பவுத்திரர்களுடன் அனைத்து நலன்களைப் பெற்று வாழ்ந்து நற்கதியடைந்து, வைகுண்டப் பதவியையும் அடைவாள் என்று கூறலானார்கள்.

அரசனும் ரதஸப்தமி விரதம் செய்யும் விவரமும் கேட்டு அறிந்து, அதன்படி கிரமப்படி அனுஷ்டித்து, பூஜைகள் செய்து விரத பூர்த்தி செய்ததில் அவர் மகள் நோய் குணமடைந்து, கணவருடன் இல்வாழ்க்கை வாழ்ந்து புத்திரர்கள், பவுத்திரர்களுடன் வாழ்ந்து சொர்க்கப் பதவியையும் அடைந்தாள் என்பதாகும்.

இவ்விரதம் புஷ்யபகுள தசமி முதல் மாத சுக்ல ஸப்தமி வரை அதிகாலையில் எழுந்து சுத்த நீரில் நீராடி, சூரிய நமஸ்காரங்களைச் செய்து, பால் சாதம் கலந்து நிவேதித்து, அவ்வன்னத்தையே, அவள் உண்டு வர வேண்டும், அதாவது தை மாத பவுர்ணமிக்குப்பின் வரும் தசமி முதல் தை அமாவாசைக்குப்பின் வரும் ஸப்தமி வரை விரதமேற்பதாகும். ரதஸப்தமி அன்று வெள்ளி, தங்கம் இவைகளால் ரதம்போல் செய்து சூரியன், சந்திரன் படம் வெள்ளித்தகட்டில் இரண்டு ஜதைகளில் (நான்கு தகடுகளில்) வரைந்து ரதத்தில் வைத்து அதைப்பூஜித்து, சர்க்கரைப் பொங்கல், வடையுடன் பன்னிரண்டு வகை இனிப்பு வகைகளுடன் நிவேதித்து, ஷோடசோபசாரங்களுடன் பூஜைகளை முடித்து பன்னிரண்டு அந்தணர்கள் அல்லது வேதம் படித்தவர்களையாவது அழைத்து அன்னம் அளித்து இருசுமங்கலிப்பெண்களுக்குப் இப்பூஜை செய்த சூரிய சந்திரதகடுகளையும் வைத்து தாம்பூலம் தர இவ்விரதம் பூர்த்தி அடையும் என்று கூறினார்கள்.

ஒரு காலத்தில் ஈஸ்வரன் தான் மட்டும் உலகத்திற்கு பெரிய கடலாய் பிரகாசிப்பது போதாது என்று எண்ணி மற்றொரு கடலையும் உண்டாக்கினார். இதற்குத் தான் சூரியன், ஆதித்யன், பாஸ்கரன் என்று பல பெயர்கள் உண்டாயின.

தக்ஷனின் புத்திரியாகத் தோன்றிய அதிதி, மண்ணிலும், விண்ணிலும் பரவி இருக்கும்படியான ஒரு பெரிய அண்டத்தை அவள் ஈன்றெடுத்தாள். அந்த அண்டத்திலிருந்து பன்னிரெண்டு வடிவனாக சூரியன் ஆயிரம் கிரணங்களுடன் தோன்றினார். முதன் முதலில் சூரியன் ஹிரண்யகர்ப்பராகத் தோன்றிய அவரே ஆதிதேவர் ஆதலால் அவருக்கு ஆதித்யன் என்ற நாமம் உண்டாயிற்று.

ஒரு சமயம் ஜலப்பிரளயம் ஏற்பட்டது. எங்கும் நிறைந்திருக்கும் ஜலத்திற்கு நாரம் என்ற பெயர் உண்டு. அந்த ஜலத்தையே தமது இருப்பிடமாகக் கொண்டதால், நாராயணன் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது.

உலகம் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவர் சூரியன். ஆதி அந்தம் பிறப்பு இறப்பு ஆகிய இவை எதுவும் அப்பரம்பொருளுக்கு இல்லை. அவரை வஸ்துவாகவும் கூறுவர். அந்த வஸ்துக்கு வாசனை, வர்ணம், ரஸமோ, சப்தமோ, ஸ்பரிசமோ எதுவும் இல்லை. அது பரப்பிரம்மத்திடமிருந்து உண்டானது. அந்த பரப்பிரம்மத்தின் உருவே சூரியமண்டலம், அவருடைய சொரூபம் சாதாரணமாக உள்ளவர்கள். அறிய முடியாததாகும். அவருடைய உருவம், ஞானம், வைராக்கியம், தர்மம், ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்கு இருப்பிடமாக இருக்கின்றது.

சூரியனுடைய ஒளி அண்டமாகிய தாளத்தின் நடுவே இருந்துகொண்டு, நான்கு பக்கங்களிலும், மேலும் கீழும் பிரகாசித்துக்கொண்டு இருப்பதால் சுற்றிலும் உள்ள இருளைப்போக்குகின்றன. சூரியன் மிகுந்த பிரகாசத்தையுடைய கிரணங்களால் இவ்வுலகம் முழுவதும் வியாபித்து எங்கும் பிரகாசித்து சகல உலகங்களையும் ஒளிமயமாக்குகிறார்.

சூரியனுடைய ஆயிரம் கிரணங்கள் குளிர், மழை உஷ்ணம் ஆகியவற்றை உண்டு பண்ணுகின்றன. சூரியனுடைய கிரணங்கள் பொதுவாக தேவர்களையும், பிதுருக்களையும், மனிதர்களையும் போஷிக்கின்றன. ஔஷதிகளில் சக்தியை அளித்து அவற்றின் மூலம் மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஸ்வதா என்பதில் ஸுதி என்ற அம்சத்தை அளித்து பிதுருக்களைப்போஷித்தும், அமிருதத்தை அளித்து தேவர்களைக் காத்தும் வருகிறார்.

அவரே அக்னியாகவும், பன்னிரண்டு சூரியனாகவும் இருந்து மூன்று உலகங்களையும் பிரகாசப்படுத்துகிறார். அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள் ஆதித்யனையே அடைகிறது. அவரிடமிருந்து மழை உண்டாகிறது. மழையினால் உணவுப்பொருள் பெருகி, மனிதர்கள் உயிர் வாழ்கிறார்கள்.

நீரினால் தான் சூரியன் எல்லா காரியங்களையும் நடத்துகிறார். மழையினால் தான் சூரியனுக்குப்பிரகாசம் நீரானது சூரியனுடைய வெப்பத்தை தாங்கி மேகமாகி மழையாகப் பொழிகிறது.

சூரிய மண்டலத்தைச் சுற்றி அநேக ரிஷிகள் தேவர்கள் நிலைபெற்று வாசம் செய்து, மத்தியிலுள்ள சூரியனைத் துதித்து வருகிறார்கள். சூரியனே சர்வ கிரகங்களுக்கும் பதியாக விளங்குகிறார். ஆதித்தன், சோமன், அங்காரகன், புதன், பிரகஸ்பதி, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பதுபேரும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஆவர். சுப, அசுபங்களை எடுத்துக் காட்டும் அதிகாரிகளாக நவக்கிரகங்கள் விளங்குகின்றன. அவர்களில் சூரியனும் சந்திரனும் மண்டலக் கிரகங்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள். ராகு சாயா கிரகம் என்றும் மற்ற ஆறு கிரகங்களும் நக்ஷத்திர கிரகங்கள் ஆகும். நக்ஷத்திரங்களும் சூரியனை ஆதாரமாகக் கொண்டவைகளே.

காலத்துக்கு சூரியனே காரணமாக இருக்கிறார். க்ஷணம், முகூர்த்தம், பகல், இரவு, பக்ஷம், மாசம், ருது, வருஷம் என்ற காலப்பிரமாணங்கள் எல்லாம் அவரிடமிருந்தே உண்டாகின்றன.

காலப்பாகுபாடுகளினால் செடிகொடிகள் பயிர் பச்சைகள் வளர்கின்றன. பாகுபாடுகள் இல்லையெனில் பயிர்கள் விளையாது, பயிர்கள் விளையாவிடில், பூமியில் உள்ளவர்களும், விண்ணில் உள்ளோடும் சூரியன் இல்லாமல் ஒரு காரியமும் செய்ய இயலாது. அக்னி ஹோத்திரம் இல்லை. யாகயக்ஞங்கள் இல்லை.

சூரியனுடைய சஞ்சாரத்தின் காரணமாகவே பகல் இரவு உண்டாகிறது. உதயமாகும்போது ரிக்வேத சொரூபமாகவும், மத்தியான வேளையில் யஜுர்வேத சொரூபமாகவும், சாயங்காலத்தில் சூரிய அஸ்தமான வேளையில் சாமதேவ சொரூபியாகவும் இருக்கின்றார்.

விசுவகர்மாவின் மகள் ஸரேணு என்பவள் அவளே ராக்ஞீ என்றும் ஸமுக்ஞா என்றும் பிரபாஸா என்றும் பலபெயர்கள் உண்டு. அவளே சூரியனுக்கு மனைவியாவாள். அவளுடைய நிழலே சாயாதேவி எனப்படுபவள். ஸமுக்ஞாவினால் உண்டாக்கப்பட்டவள் சாயாதேவியாவாள். நிக்ஷுபா என்றும் பிருதிவீ என்றும் பல பெயர்களில் சாயா. சூரியனுக்கு மற்றொரு பத்தினியாக இருக்கிறாள்.

சூரியனுக்கு ராக்ஞீ த்யௌ என்ற பெயரில் ஆகாசமாகவும், நிக்ஷுபா பிருதிவீ என்ற பெயரில் பூமியாகவும் இரு பத்தினிகளாக விளங்குகிறார்கள்.

இப்படியிருக்க அநேக யுகங்களுக்குப் பிறகு திடீரென்று சூரியனின் காந்தி குறைந்தது. தேவர்கள் பிரம்மதேவனிடம் முறையிட்டதில், அனைவரும் சேர்ந்து ஆலோசித்ததில், விசுவகர்மாவின் சாணைப்பிடிக்கும் இயந்திரத்தில் இந்த சூரியனைக் கடைந்தால் முன்போல் காந்தி உண்டாகும் என்று, சூரியனிடம் சொன்னதில், சூரியனும் அதற்குச் சம்மதிக்கவே அனைவரும் விஸ்வகர்மாவிடம் சென்று, அவருடைய யந்திரத்தில் சூரியனைக் கடையவே முன்னைவிடப் பிரகாசமான காந்தியுடன் திகழ்ந்தார். சூரியனைக் கடைந்து ஒளி ஏற்படுத்திய நாளான இன்று ரதஸப்தமி திதி என்று கொண்டாடப்படுகிறது. மிகப்புண்ணியமான நாளாகும்.

ரதஸப்தமி திதி அன்று ஒரு சக்கரம் உடைய எழு குதிரைகள் பூட்டிய ஒரு ரதத்தையும் மகாவிஷ்ணு வானவர் சூரியனுக்குக் கொடுத்தார். பச்சைக்குதிரை ரூபமெடுத்த ஏழுசந்தஸ்ஸுகளும் அவருடைய தேரிலே பூட்டப்பட்டிருக்கின்றன. காஸ்யப முனிவரின் பத்தினியான விந்தையிடம் உண்டான கால்களில்லாத அருணனெனும் பிள்ளை, சூரியனுடைய ரதத்திற்கு ரத சாரதியாக ஏற்படுத்தப்பட்டான்.

சூரியனுடைய ரதம் பொன்மயமானது. ஒன்பதாயிர யோஜனை விஸ்தீரணம் உடையது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும், மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தையும் குறிக்கும். அந்த ரதத்துக்கு ஒரே சக்கரம் மட்டுமே உண்டு. அந்தச் சக்கரம் ஸம்வத்சரமயமானது. சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும், ஆறு ருதுக்களையும் குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்தராயணத்தையும், தக்ஷிணாயத்தையும் குறிக்கின்றன. அந்த ரதத்தை காயத்ரி, திருஷ்டுப், அனுஷ்டுப், பிரகதி, பங்க்தி, ஜகதி, உஷ்ணிக் என்ற ஏழு சந்தஸ்ஸுகளும் குதிரைகளாகி ரதத்தை இழுத்துச் செல்கின்றன. பொன்மயமாக ஜொலிக்கும் அந்த தேரிலேறிதான் சூரியன் நாள்தோறும் வானிலே பவனி வருகிறார். ரத சாரதிக்கு இடுப்புக்குக் கீழே அவயவங்கள் கிடையாது.

சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றி சஞ்சாரம் செய்து உதயம், மத்தியானம், அஸ்தமனம், அர்த்த ராத்திரி, என்ற காலங்களை உண்டாக்குகிறார். தை மாதம் சுக்லபக்ஷ ஸப்தமிக்கு  ரதஸ்பதமி என்று பெயர். இன்றுதான் சூரியனுக்கு விசேஷமான காந்தி உண்டாயிற்று என்று புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. ரதஸப்தமி அன்று பிதாமகர் பீஷ்மர் மோக்ஷம் அடைந்த நாள். ஆதலால், தர்ப்பணம் செய்பவர்களும் உண்டு. அவருடைய சந்ததிகளான நாம் அவருக்குத் தர்ப்பணம் கொடுப்பதால், நமக்குப் புண்ணியங்கள் சேர்வதாக ஆகும். இதற்குப்புண்ணிய கால தர்ப்பணம் என்று பெயர்.

அன்றையதினம் எருக்கன் இலைகள் ஏழும், இலந்தை இலைகள் ஏழும் ஒன்று சேர்த்து, மஞ்சள் கலந்த அட்க்ஷதையுடன் பெண்கள், ஆண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் தலைக்குமேல் வைத்துக்கொண்டு நீராடவேண்டும். இலைகளைப் பின்பக்கமாகத்தள்ளி விட்டு விடவேண்டும். தந்தை இல்லாத ஆண்கள், கணவனை இழந்த பெண்கள் இவர்கள் ஏழு எருக்கன் இலைகள், ஏழு இலந்தை இலைகளுடன் வெண்மையான பச்சரிசியுடன் கருப்பு எள் கலந்து தலையில் வைத்து நீராடவேண்டும்.

ரதஸப்தமி அன்று சுவாமியிடம் சுத்தமான இடத்தில், செம்மண்ணினால் தேவையான அளவு பூசி, அந்த இடத்தில் ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய சந்திரரை வரைந்து, பவனி வருவதாக இருத்தல் வேண்டும். அதற்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு, சிகப்பு நிறம் உட்பட பலவாசனை உள்ள மலர்களால் அலங்கரித்து சூரிய நாராயண பூஜையைச் செய்ய வேண்டும் (பக்கம் பார்க்கவும்). அன்று சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை ஓட்டையுடன் (துளையுடன்) செய்து இரண்டையும் நிவேதனம் செய்ய வேண்டும். கணபதி பூஜை முதல் ஆவாஹனம், ஷோடசோபசார பூஜையுடன் கொண்டாட வேண்டும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் வைப்பதும் உண்டு. சூரிய, சந்திரர் வரைந்து, சந்தனம் குங்குமம் வைத்து, பூக்களால் பூஜிக்கலாம். அன்று சூரியனுக்கு விசேஷகாந்தி ஏற்படுவதுடன், உத்தராயணப் பக்கம் ரதம் திரும்புவதாகவும் கூறுவர்.

பலன்: இவ்விரதத்தினால் குடும்பத்தில் ஒற்றுமையும், நம் முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடைத்து, ஸகல மங்களங்களும் உண்டாகும்.

ரதஸப்தம் ஸ்நானமந்த்ரம்


(தை அமாவாசைக்குப் பிறகு வரும் முதல் ஸப்தமி அன்று ரத ஸப்தமி வரும். அன்று ஆண்கள் தலையில் 7 எருக்கம் இலைகளை வைத்து அதில் பசுவின் சாணம் வைத்தும், இரு புஜங்களில், இரண்டு எருக்கம் இலைகளை வைத்து, அதில் அக்ஷதை வைத்தும் ஸ்னானம் செய்ய வேண்டும். பெண்கள் தலையில் 7 எருக்கம் இலைகளை வைத்து அதில் சிறிதளவு குழைத்து மஞ்சள் வைத்தும், இரு புஜங்களில், இரண்டு எருக்கம் இலைகளை வைத்து, அதில் அக்ஷதை வைத்தும் ஸ்னானம் செய்ய வேண்டும்.)

ஸப்த ஸப்தப்ரியே தேவி ஸப்தலோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்

யன்மயாத்ர க்ருதம்பாபம் பூர்வம் ஸப்தஸு ஜன்மஸு
தன்மே சோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்த ஸப்தமீ

ஏதஜ்ஜன்மக்ருதம் பாபம் யச்ச ஜன்மாந்த்ரார்ஜிதம்
மனோவாக்காயஜம் பாபம் ஜ்ஞாதாஜ்ஞாதே ச யே புன:

இதி ஸப்தவிதம் பாபம் ஸ்னானான் மே ஸப்தஸப்திகே
ஸப்தவ்யாதி ஸமாயுக்தம் யர மாகரி ஸப்தமி

அர்க்ய மந்த்ரம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

(வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக் கொண்டு, பாலும், தண்ணீரும் கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தட்டில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் இதமர்க்யம் என்று சொல்லும்போது இதை செய்ய வேண்டும்.)

ஸப்த ஸப்திவஹ ப்ரீத ஸப்தலோக ப்ரதீபன
ஸப்தமீ ஸஹிதோதேவ, க்ருஹாணார்க்யம் திவாகர
திவாகராய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar