பதிவு செய்த நாள்
06
நவ
2018
03:11
ஆதிகாலத்தில் இடி, மின்னலால் மரங்கள், புதர்கள் தீப்பிடித்து குபுக்கென்று சிவப்பு நிற ஜூவாலைகள் தோன்றும். அந்த தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர தீயை பயன்படுத்தினான்.
இந்த பாரத நாட்டில் கடவுள் அருள் வேண்டி ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஆன்மிகப் பின்புலம், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உண்டு. நரகாசுரன் என்ற அரக்கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து உலக மக்களை காத்தருளிய நாளை தீபமேற்றி தீபாவளியாக கொண்டாடி வருகிறோம்.
தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்திருநாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது தீ ஒளி என்று பொருள். வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி , வளம் பெருகும் என்பது ஐதீகம். தீய சக்திகளை விரட்டியதை மகிழ்ச்சியுடன் கொண்டாட, பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம். காலையில் குளிச்சிட்டு, புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு, ருசியா நாலு பலகாரத்த சாப்பிட்டோமா, அப்படியே டிவியில போடும் சினிமா நிகழ்ச்சியை பார்த்தோமான்னு பலருக்கு தீபாவளி வீணாக முடிந்து விடுகிறது. இன்னும் சிலருக்கோ தீபாவளி என்பது மது அருந்தி, மாமிச உணவுகளை உண்ணும் ஒரு கொண்டாட்டமாகவே உள்ளது.
இந்த இனிய தீபாவளிப் பண்டிகை பற்றி இன்றைய இளைய சமுதாயம் வரலாற்று பின்னணியுடன் தெரிந்து கொள்ளவே இந்த ஆதிமனிதன் கொளுத்திய மத்தாப்பூ குரங்கிலிருந்து வந்த ஆதி மனிதன் தீயை கண்டறியா விட்டால் இன்றைக்கு நாமெல்லாம் பட்டாசு வெடித்திருக்க முடியாது. பூமியின் அற்புதப் படைப்பே தீ என்கிறது யவன புராணம். ஆதிகாலத்தில் இடி, மின்னலால் மரங்கள், புதர்கள் தீப்பிடித்து குபுக்கென்று சிவப்பு நிற ஜூவாலைகள் தோன்றும். அந்த தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர தீயை பயன்படுத்தினான்.
தன்னை தாக்கும் மிருகங்களை தீயின் உதவியுடன் விரட்டியடித்து வெற்றி கொண்ட போது கையில் மத்தாப்பூ போல் தீயை வைத்து முழக்கமிட்டு, கூட்டமாக கொண்டாடிய ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆதிமனிதனுக்கு தீபாவளியே. தீயை அடக்கியாளப் பழகிய மனிதன் தீயை சிறு சிறு பொறியாக மாற்றி தீக்குண்டங்களில், அதாவது வேள்வியில் நிலை நிறுத்தினான். இதுவே பின்னாளில் சிறு ஒளியாக தீபமாக மாறியது. மனிதன் உயிர் வாழவும், உயிரை பாதுகாக்கவும் பயன்பட்டதால் தீ புனிதமாக்கப்பட்டது. இன்றும் மாலை நேரத்தில், வீடுகளில் தீபமேற்றி செல்வத்தின் அதிபதி லட்சுமியை வரவேற்கும் முறை உள்ளது. எனவே, ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தீப ஒளி நம்மை காத்து வருகிறது.
மனிதன் மனதிலுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறைவனை வணங்கினான். உள்ளத்து தீமையை சுட்டெரி தீ என்ற அறிவை பயன்படுத்தி விரட்டி, குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்களை விலக்கி சங்கடங்கள் வந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். தீபாவளி மத்தாப்பூவைப் பார்த்தீர்களா? அதன் தலையில் நெருப்பை வைத்தாலும், வண்ண வண்ணமாய் பொங்கி எப்படி எல்லாம் சிரிக்கிறது பார்த்தீங்களா? அப்படி இருப்போமே!