● உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள். எதையும் தேவைக்கு அதிகமாய் எதிர்பார்க்காதீர்கள். அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதைக் கைவிடுங்கள். ● பணம், பதவி உங்களிடம் இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் இன்னும் பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பிரச்னை வரும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவக்குங்கள். ● புன்னகைக்கவும், சின்னச்சின்ன அன்புச்சொற்களைக் கூறவும், நன்றி சொல்லவும் மறந்து விடாதீர்கள். ● நாக்கு நேர்மையாக இருக்குமானால் ஒருவனுடைய இதயம் நேர்மையான வழியில் செல்லும். ● மனம்போன போக்கில் நடந்து கொள்ளாமல், அதை அடக்கி மறுமைக்கும் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி.