பதிவு செய்த நாள்
08
நவ
2018
02:11
கோவை:மத ஊழிய அமைப்புகளுக்கு காணிக்கை செலுத்த, பயன்பாட்டில் இருந்த மணி யார்டர் முறைக்கு மாற்றாக, இ-பேமன்ட் வசதியை, தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இயேசு அழைக்கிறார் எனும் ஊழிய அமைப்பு, கிறிஸ்துவின் போதனைகளை பரப்பும் பணி யில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு, உலகம் முழு வதிலும் இருந்து காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது.
கோவையிலுள்ள இவ்வமைப்புக்கு, ஒருநாளைக்கு குறைந்தது, 200 - 300 மணியார்டர்கள் வருவதாக தபால் துறையினர் கூறுகின்றனர். தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப் பத்தை பூர்த்தி செய்து, மணிக்கணக்கில் காத்திருந்து, மணியார்டர் ஆக அனுப்ப வேண்டும். காணிக்கை தொகையில், 5 சதவீத கமிஷனை தபால்துறை எடுத்துக்கொள்ளும்.இனி மக்கள் இதற்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, காத்திருக்க அவசியமில்லை.
இதற்கென பிரத்யேக, இ-பேமன்ட் முறையை, தபால்துறை கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக, வாடிக்கையாளர்கள் தமிழகத்தின் எந்தவொரு தபால்நிலையங்களிலும், இதற் கான கட்டணத்தை செலுத்தினால், நேரடியாக அத்தொகை சம்பந்தப்பட்ட அமைப்பின் கணக் கில் சேர்ந்துவிடும்.இதுவரை மணியார்டரை பட்டுவாடா செய்து வந்த, தபால்காரரின் வேலைச் சுமையும் இதனால் குறைகிறது. இம்மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத் துக்கு, கிறிஸ்தவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.