பதிவு செய்த நாள்
08
நவ
2018
02:11
வெள்ளகோவில்: தீபாவளியை முன்னிட்டு குமாரசாமிக்கு தங்க கீரிடம் வைத்து சிறப்பு அலங் காரம் மேற்கொள்ளப்பட்டது.வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசுவாமிக்கு, தீபாவளியை முன்னிட்டு 16 திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. அதன்பின், சுவாமிக்கு தங்கக் கிரீட கவசம் வைத்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து, வேண்டுதல் நிறைவேற பட்டாசு வெடித்தனர். இதே போல் பாப்பம்பாளையம், நாட்டராய சுவாமி கோவில், வீரசோழபுரம் மெண்டி கருப்பணசாமி கோவில், ஓலப்பாளையம், முருக்கங்காடு தம்பிக் கலையசாமி கோவில், வெள்ளகோவில் செல்லாண்டியம்மன் கோயில், முத்தூர் அத்தனூரம்மன் கோவில், குப்பியண்ண சுவாமி கோவில்களிலும், தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.