பதிவு செய்த நாள்
08
நவ
2018
04:11
புதுச்சேரி: தீபாவளியையொட்டிய அமாவாசை தினமான நேற்று, கோவில்களில் நோன்பு வழிபாடு நடந்தது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தன்றும், மறுநாள் அமாவாசை தினத்திலும் நோன்பு வழிபாடு நடத்துவது வழக்கம் அதன்படி, தீபாவளியொட்டிய அமாவாசை தினமான நேற்று, புதுச்சேரியில் முக்கிய கோவில்களில் நோன்பு வழிபாடு நடந்தது.
பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழங்கள், வில்வ இலை, நோன்பு கயிறு ஆகியவற்றை மண் சட்டியில் வைத்து, கோவிலுக்கு எடுத்துச் சென்று, வழிபாடு செய்தனர். அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில் மற்றும், திலாசுப்பேட்டை, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள கோவில்களில் குடும்பத்துடன் பலர் நோன்பு வழிபாடு செய்தனர்.