பதிவு செய்த நாள்
09
நவ
2018
12:11
மானாமதுரை:மானாமதுரையில் திருக்கார்த்திகைக்காக வித,விதமான தீப விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
திருக்கார்த்திகை என்றாலே நினைவிற்கு வருவது விளக்கு தான். இதற்காக மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் விளக்குகளை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். நவ., 23 திருக்கார்த்திகை வருகிறது.
இதற்காக அகல் விளக்குகள், சர விளக்குகள், அணையா விளக்கு, துளசி மாடம், பெரிய கம்ப்யூட்டர் விளக்கு,குருவாயூர் ஸ்டாண்ட், 5 முக குருவாயூர் விளக்கு, நட்டு விளக்கு, 2 அடுக்கு குருவாயூர் விளக்கு,2,3 அடுக்கு தீப விளக்குகள், 1 அடுக்கு 7 சிட்டி மற்றும் 5 சிட்டி விளக்குகள், அகல் விளக்குகள்,தேங்காய் முக விளக்குகள், சாமி உருவ விளக்குகள் என வித, விதமான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் விளக்குகளுக்கு பல வகை வண்ணங்கள் பூசப்படுகின்றன. தற்போதே மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான ஆர்டர்கள் குவிந்தன.