Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாதசி விரத மஹிமை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 38. ஏகாதசி விரதம்
ஏகாதசி விரதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
06:11

விதர்ப்ப தேசமன்னன் ருக்மாங்கதன், அவனுடைய நந்தவனத்தில் வாசனை மிகுந்த மலர்கள் ஏராளமாகப் பூத்திருக்கும். அந்த நந்தவனத்தின் நடுவில் ஒரு முனிவர் தவம் செய்து வந்தார். (இவரை ஜாபாலி என்றும் கூறுவர்.) தேவலோகப் பெண்கள் வாசனை மிகுந்த பூக்கள் மீது ஆசைகொண்டு தினம்தோறும் பறித்துக் கொண்டு போக ஆரம்பித்தார்கள். வரவரப்பூக்கள் குறைவதைக் கண்ட மன்னன் திருடனைப்பிடிக்க உத்தரவிட்டான். வீரர்களோ தேவலோகப் பெண்களின் காலடிச்சுவடு இல்லாததால், அங்குத்தவம் செய்து வந்த முனிவர்தான் திருடி இருக்க வேண்டும் என எண்ணி, நந்தவனத்திலிருந்த அவரை அழைத்து வந்து மன்னன் முன்னால் நிறுத்தினார்கள். முனிவரைக் கண்ட மன்னன் பதற முனிவரோ, “மன்னா! பதறாதே, பூக்கள் தேவலோகப் பெண்களால் திருடப்படுகின்றன. நந்தவனத்தில் கொமட்டி விதைகளை விதை. அவை வளர்ந்தவுடன் திருடர்கள் பிடிபடுவார்கள்”, எனச்சொல்ல மன்னனும் அப்படியே கொமட்டி விதைகளை விதைத்தான். அவை நான்கு வளர்ந்தன.

வழக்கம் போலப் பூ எடுக்க வந்த தேவலோகப் பெண்கள் பூப்பறிக்கும் போது, ஒருத்தி காலில் கொமட்டிக் கொடி பட அவள் பூமியில் இறங்க வேண்டிதாயிற்று. இதை முனிவர் மன்னனிடம் கூற அவரும் வந்து பார்த்தார். தேவலோகப் பெண் விவரம் கூறி கொமட்டிக் கொடி காலில்பட்டதால் தான் தூய்மை இழந்து விட்டதால், தான் மறுபடி தூய்மை பெற்றுத் தேவலோகம் போக வழி செய்யும்படி கேட்டாள். மன்னன் என்ன வழி? என்று கேட்க அவள் ஏகாதசியின் பெருமையைக் கூறி யாராவது ஏகாதசி விரத பலனைத் தந்தால் தான் போக முடியும் என்றாள். மன்னன், “அப்படி ஒரு விரதம் இருப்பதே தெரியாதே ”, என்று சொல்ல அவள், “மன்னா! உன் அரண்மனையிலிருக்கும் துணி வெளுக்கும் பெண் ஏகாதசி விரதமிருந்தவள். அவளை அழைத்துப் பலனை எனக்குத் தரச்சொல்” என்றாள். மன்னனும் அவள் கூறியபடியே செய்ய தேவலோகப் பெண் மீண்டும் தேவலோகம் போய்ச் சேர்ந்தாள். ஏகாதசி விரதமிகமை அறிந்த மன்னன் நாட்டு மக்கள் அனை வரையும் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கும்படி செய்து தானும் கடைப்பிடித்து நற்கதியடைந்தார்.

கம்பமென்னும் நகரை ஆண்ட வைகானஸ மன்னன் சொப்பனத்தில் தன் பிதுர்க்கள் நரகத்தில் கஷ்டப்படுவதைப் பார்த்து துக்கித்தான். பார்வதி ரிஷியை வணங்கி இதற்குப் பரிகாரம் வேண்டினான். மார்கழி மாத வளர்பிறை தசமியன்று ஒரு பொழுது சாப்பிட்டு, ஏகாதசியன்று பால், பழங்கள் மட்டுமே <உட்கொண்டு துவாதசியன்று காலையில் நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சமைத்து, அதிதி போஜனம் செய்விக்க வேண்டும்’ என்றார் முனிவர். அப்படியே செய்தான் வைகானஸன். அன்று இரவே மூதாதையர் அவன் கனவில் தோன்றி தாங்கள் சொர்க்கம் சேர்ந்ததைக் கூறி வாழ்த்தினர். மன்னனும் அஷ்டபோக பாக்கியங்களோடு நீண்ட காலம் அரசாண்டான்.

பலன்: பயபக்தியோடு ஏகாதசி விரதமிருப்பவர்கள் எல்லா பாக்கியங்களையும் அடைவார்கள் என்பது திண்ணம். பக்தர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மன்னனைப் போல உயர்ந்த வாழ்வும், சகல ஐஸ்வர்யங்களும் அடைந்து சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.

குறிப்பு:

1. ஏகாதசி அன்று பிராம்மணர்களை/ கொண்டு ரிக் வேதத்தில் உள்ள பவமானம் என்னும் பாகத்தை பாராயணம் செய்வது உத்தமம். யஜுர் வேதத்தில் அச்சித்ரா அஸ்வமேதம் என்கிற ப்ரஸ்ன பாராயணமும் விசேஷம்.

2. இதனால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

3. அன்று உபவாசம் இருந்து, அடுத்தநாள் துவாதசி அன்று திதி ஆரம்பித்த உடனேயே, ஸூர்யோதய சமயத்திலிலேயே, விஷ்ணு பூஜை செய்து ‘பாரணை ’ (விரதமுடிப்பு  போஜனத்தில்) செய்வது உத்தமம்.

4. பாரணையில் அகத்திகீரை நெல்லிக்காய் சேர்ப்பது விசேஷம்.

5. நித்தியான்னதாதா, ஏகாதசி வ்ரதம் இருப்பவர் (மாஸோபவாசி), சதாபிஷேகம் செய்து கொண்ட தம்பதி, நித்யாக்னி ஹோத்ரி ஆகியோரை பகவனின் ஸ்ரீகிருஷ்ணர் நமஸ்கரிப்பதாக வாக்யம் கூறுகிறது.

ஏகாதசி விரதம்

(ஸ்ரீ மஹாவிஷ்ணு பூஜை)

காலம்: ஒவ்வொரு மாதமும் சுக்லபக்ஷ  க்ருஷ்ண பக்ஷங்களில் வருகிற அனைத்து ஏகாதசி திதியிலும் உபவாஸ வ்ரதம் மேற்கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணு பூஜை செய்யவும்.

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. மஹா விஷ்ணுவை தீபத்தில் (அ) படத்தில் ஆவாஹனம் செய்யவும்.

3. சாலக்கிராமத்தில் பூஜை செய்வது உத்தமம்.

4. நைவேத்ய பொருட்கள்: சாதம், பாயஸம், வடை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு

5. துளசியால் அர்ச்சிப்பது மிகவும் விசேஷம்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்


ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மோரோ: தக்ஷிணே பார்ச்’வே ச’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே *......நாம ஸம்வத்ஸரே, *....அயனே, *...ருதௌ, *.....மாஸே, *....பக்ஷே, ஏகாதச்’யாம், *....சு’பதிதௌ, *......வாஸரயுக்தாயாம், *......நக்ஷத்ர யுக்தாயாம் ச ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் ஏகாதச்’யாம் சு’பதிதௌ.

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்யைச்’வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்த்யர்த்தம், புத்ரபௌத்ராபிவ்ருத்த்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்த்யர்த்தம், மம இஹ ஜன்மனி பூர்வஜன்மனி ஜன்மாந்தரே ச ஸம்பாவிதானம் ஜ்ஞாதாஜ்ஞாதக்ருத மஹாபாதக சதுஷ்டய வ்யதிரிக்தானம், ரஹஸ்யக்ருதானாம் ப்ரகாச ’ க்ருதானாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதனத்வாரா ஸகல பாபக்ஷயார்த்தம் ஸ்ரீபூமி நீளா ஸமேத ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரஸாத ஸித்த்யர்த்தம் யாவச்சக்தி த்யானாவாஹனாதி ஷோடச ’ உபசார பூஜாம் கரிஷ்யே, ததங்கத்வேன கலச ’பூஜாம் கரிஷ்யே.

(என்று கூறி அக்ஷதையை வடக்கு பக்கமாகப் போட்டு, தீர்த்தம் தொட்டு கைகளை அலம்பவும்.)* பஞ்சாங்கம் பார்க்கவும்

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)


கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானம்

த்யாயேத் சதுர்ப்புஜம் தேவம் ச’ங்க சக்ர கதாதரம்/
பீதாம்பர யுகோபேதம் லக்ஷ்மீயுக்தம் விபூஷிதம்//

லஸத் கௌஸ்துப சோ’பாட்யம் மேகச்’யாமம் ஸுலோசனம்/
அஸ்மின் பிம்பே ஸ்ரீபூமிநீளா ஸமேத மஹாவிஷ்ணும் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

ஆவாஹனம்

ஆகச்ச தேவதேவேச ’ ஜகத்யோனே ரமாபதே/
கலசே’ஸ்மின் ப்ரதிஷ்டானே ஸன்னிதேஹி க்ருபாம் குரு//

அஸ்மின் பிம்பே ஸ்ரீபூமி நீளா ஸமேத
மஹாவிஷ்ணும் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

ப்ராணப்ரதிஷ்டை

(பக்கம் 41ம் முதல் 48 வரை உள்ளபடி செய்யவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

நமோஸ்து பத்மநாபாய நாகாதிபதயே நம:/
ஸஹஸ்ர சி’ரஸே துப்யம் ஆஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

வராஹ ரூபிணே துப்யம் ஸுப்ரஸன்னாய தே நம:/
பாத்யம் க்ருஹாண ஸர்வஜ்ஞ தீர்த்த பாதாய தே நம://
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நமோஸ்து தேவ தேவச’ விச்’வரூபின் ஸனாதன/
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் நமஸ்தே தரணீ தர//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

மதுபர்க்கம் மயா தேவ தீயதே வரஸித்தயே/
க்ருஹாண தேவதேவேச ’ பரிபூர்ண நமோஸ்து தே//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

பயோ ததிக்ருதம் சைவ ச’ர்க்கரா மதுஸம்யுதம்/
பஞ்சாம்ருதேன ஸ்னபனம் க்ருஹ்யதாம் புருஷோத்தம்//
ஸ்ரீமஹாவிஷ்ணவே நம: பஞ்சாம்ருதஸ்னானம்
ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தெளிக்கவும்.)

நானாதீர்த்த ஸமுத்பூதை: ஆனீதை: புண்யவாரிபி:/
ஸ்னானமாசர தேவேச’ ஸர்வபாப க்ஷயங்கர//
சு’த்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனம் ஸமர்ப்பயாமி/
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

திவ்யாம்பர தரானந்த நரகார்ணவ தாரண/
வஸ்த்ரம் க்ருஹாண தேவேச’ த்ரைலோக்ய வ்யாபக ப்ரபோ//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் ஸமர்ப்பிக்கவும்)

தாமோதர நமஸ்தேஸ்து த்ராஹி மாம் பவஸாகராத்/
ப்ரஹ்மஸூத்ரம் சோத்தரீயம் க்ருஹாண புருஷோத்தம//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

ஸ்ரீகந்தம் சந்தனைர் மிச்’ரம் கர்ப்பூராகரு ஸம்யுதம்/
கஸ்தூரிகாதி ஸம்யுக்தம் கந்தாதி ஸுமனோஹரம்//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
கந்தான் தாரயாமி (சந்தனமிடவும்)

அக்ஷதான் தவளான் திவ்யான் சா’லீயான் தண்டுலான் சு’பான்/
அக்ஷயார்த்தம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் மதுஸூதன//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

மல்லிகாதி ஸுகந்தீனி மால்யாத்தீனி வை ப்ரபோ/
மயா (ஆ) ஹ்ருதானி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)

ஓம் வராஹாய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் ஸங்கர்ஷணாய    நம: குல்ப்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் காலாத்மனே        நம: ஜானுநீ        பூஜயாமி (முட்டி)
ஓம் விச்’வரூபாய    நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் க்ரோடாய        நம: ஊரூ        பூஜயாமி (தொடை)
ஓம் போக்த்ரே        நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் விஷ்ணவே        நம: மேட்ரம்        பூஜயாமி (மர்மம்)
ஓம் ஹிரண்யகர்ப்பாய    நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் ஸ்ரீவத்ஸதாரிணே    நம: குக்ஷிம்        பூஜயாமி (வயிறு)
ஓம் பரமாத்மனே     நம: ஹ்ருதயம்        பூஜயாமி (இடது நெஞ்சு)
ஓம் ஸர்வாஸ்த்ரதாரிணே    நம: வக்ஷ:         பூஜயாமி (மார்பு)
ஓம் வனமாலினே    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸர்வாத்மனே    நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் ஸஹஸ்ராக்ஷாய    நம: நேத்ராணி        பூஜயாமி (கண்கள்)
ஓம் ஸுப்ரபாய        நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் சம்பகநாஸிகாய    நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)
ஓம் ஸர்வேசா’ய        நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
ஓம் ஸஹஸ்ரசி’ரஸே    நம: சி’ர        பூஜயாமி (தலை உச்சி)
ஓம் நீலமேகனிபாய    நம: கேசா’ன்        பூஜயாமி (கிரீடம்/தலை)
ஓம் மஹாபுருஷாய    நம: ஸர்வாங்கம்     பூஜயாமி (முழுவதும்)

சதுர்விம்ச’தி (24) நாம பூஜை

ஓம் கேச’வாய        நம:
ஓம் நாராயணாய    நம:
ஓம் மாதவாய        நம:
ஓம் கோவிந்தாய        நம:
ஓம் விஷ்ணவே        நம:
ஓம் மதுஸூதனாய    நம:
ஓம் த்ரிவிக்ரமாய    நம:
ஓம் வாமனாய        நம:
ஓம் ஸ்ரீதராய        நம:
ஓம் ஹ்ருக்ஷீகேசா’ய    நம:
ஓம் பத்மனாபாய    நம:
ஓம் தாமோதராய    நம:
ஓம் ஸங்கர்ஷணாய    நம:
ஓம் வாஸுதேவாய    நம:
ஓம் ப்ரத்யும்னாய    நம:
ஓம் அனிருத்தாய    நம:
ஓம் புருஷோத்தமாய    நம:
ஓம் அதோக்ஷஜாய    நம:
ஓம் நாரஸிம்ஹாய    நம:
ஓம் அச்யுதாய        நம:
ஓம் ஜனார்தனாய    நம:
ஓம் உபேந்த்ராய        நம:
ஓம் ஹரயே         நம:
ஓம் க்ருஷ்ணாய        நம:

ஸ்ரீவிஷ்ணு அஷ்டோத்தரச’த நாமாவளி

ஓம் அச்யுதாய        நம:
ஓம் அதீந்த்ரியாய    நம:
ஓம் அனாதினிதனாய    நம:
ஓம் அனிருத்தாய    நம:
ஓம் அம்ருதாய        நம:
ஓம் அரவிந்தாய        நம:
ஓம் அச்’வத்தாய        நம:
ஓம் ஆதித்யாய        நம:
ஓம் ஆதிதேவாய    நம:
ஓம் ஆனந்தாய (10)    நம:
ஓம் ஈச்’வராய        நம:
ஓம் உபேந்த்ராய        நம:
ஓம் ஏகஸ்மை        நம:
ஓம் ஒஜஸ்தேஜோ த்யுதிதராய    நம:
ஓம் குமுதாய        நம:
ஓம் க்ருதஜ்ஞாய        நம:
ஓம் க்ருஷ்ணாய        நம:
ஓம் கேச’வாய        நம:
ஓம் க்ஷேத்ரக்ஞாய    நம:
ஓம் கதாதராய (20)    நம:
ஓம் கருடத்வஜாய    நம:
ஓம் கோபதயே        நம:
ஓம் கோவிந்தாய        நம:
ஓம் கோவிதாம்பதயே    நம:
ஓம் சதுர்ப்புஜாய        நம:
ஓம் சதுர்வ்யூஹாய    நம:
ஓம் ஜனார்த்தனாய    நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய    நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய    நம:
ஓம் ஜ்யோதிஷே (30)    நம:
ஓம் தாராய        நம:
ஓம் தமனாய        நம:
ஓம் தாமோதராய    நம:
ஓம் தீப்தமூர்த்தயே    நம:
ஓம் துஸ்வப்னநாச’னாய    நம:
ஓம் தேவகீநந்தனாய    நம:
ஓம் தனஞ்ஜயாய    நம:
ஓம் நந்தினே        நம:
ஓம் நாராயணாய    நம:
ஓம் நாரஸிம்ஹவபுஷே (40)    நம:
ஓம் பத்நாபாய        நம:
ஓம் பத்மினே        நம:
ஓம் பரமேச்’வராய    நம:
ஓம் பவித்ராய        நம:
ஓம் ப்ரத்யும்நாய        நம:
ஓம் ப்ரணவாய        நம:
ஓம் புரந்தராய        நம:
ஓம் புருஷாய        நம:
ஓம் புண்டரீகாக்ஷாய    நம:
ஓம் ப்ரஹத்ரூபாய (50)    நம:
ஓம் பக்தவத்ஸலாய    நம:
ஓம் பகவதே        நம:
ஓம் மதுஸூதனாய    நம:
ஓம் மஹாதேவாய    நம:
ஓம் மஹாமாயாய    நம:
ஓம் மாதவாய        நம:
ஓம் முக்தானாம் பரமாகதயே    நம:
ஓம் முகுந்தாய        நம:
ஓம் யஜ்ஞகுஹ்யாய    நம:
ஓம் யஜ்ஞபதயே (60)    நம:
ஓம் யஜ்ஞஜ்ஞாய    நம:
ஓம் யஜ்ஞாய        நம:
ஓம் ராமாய        நம:
ஓம் லக்ஷ்மீபதயே    நம:
ஓம் லோகாத்யக்ஷாய    நம:
ஓம் வரதாய        நம:
ஓம் வஸுமனஸே    நம:
ஓம் வ்யக்தரூபாய    நம:
ஓம் வஸுப்ரதாய    நம:
ஓம் வர்த்தனாய (70)    நம:
ஓம் வராரோஹாய    நம:
ஓம் வேதாத்மனே    நம:
ஓம் வாயுவாஹனாய    நம:
ஓம் விக்ரமாய        நம:
ஓம் விஷ்ணவே        நம:
ஓம் விஷ்வக்ஸேனாய    நம:
ஓம் வ்ருஷோதராய    நம:
ஓம் வேதவிதே        நம:
ஓம் வேதாங்காய    நம:
ஓம் வேதாய    (80)    நம:
ஓம் வைகுண்ட்டாய    நம:
ஓம் ச’ரணாய        நம:
ஓம் சா’ந்தாய        நம:
ஓம் சா’ர்ங்கதன்வனே    நம:
ஓம் சா’ச்’வதஸ்தாணவே    நம:
ஓம் சி’கண்டினே     நம:
ஓம் சி’வாய        நம:
ஓம் ஸ்ரீதராய        நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய    நம:
ஓம் ஸ்ரீமதே (90)    நம:
ஓம் சு’பாங்காய        நம:
ஓம் ச்’ருதிஸாகராய    நம:
ஓம் ஸங்கர்ஷணாய    நம:
ஓம் ஸதாயோகினே    நம:
ஓம் ஸர்வதோமுகாய    நம:
ஓம் ஸர்வேச்’வராய    நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய    நம:
ஓம் ஸ்கந்தாய        நம:
ஓம் ஸாக்ஷிணே        நம:
ஓம் சு’தர்ச’நாய (100)    நம:
ஓம் ஸுரானந்தாய    நம:
ஓம் ஸுலபாய        நம:
ஓம் ஸூக்ஷ்மாய        நம:
ஓம் ஹரயே        நம:
ஓம் ஹிரண்யகர்ப்பாய    நம:
ஓம் ஹிரண்யநாபாய    நம:
ஓம் ஹ்ருஷீகேசா’ய (108)    நம:

நாநாவித பரிமள புத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

<உத்தராங்க பூஜை

தசா’ங்கம் குக்குலம் தூபம் ஸுகந்தம் ஸுமனோஹரம்/
தூபம் க்ருஹாண தேவேச ’ஸர்வபூத மனோஹர//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா/
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபயம்//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
தீபம் தர்ச’யாமி (தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி,
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விடவேண்டும்.

அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா,
ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

(கீழே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)

அன்னம் சதுர்விதம் ஸ்வாது ரஸை: ஷட்பிஸ் ஸமன் விதம்/
பக்ஷ்ய போஜ்ய ஸமாயுக்தம் நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீபூமி, நீளாஸமேத மஹாவிஷ்ணவே நம: சா’ல்யன்னம்,
க்ருதகுள பாயஸம், மாஷாபூபம், குளாபூபம், நாளிகேரகண்ட
த்வயம், பலானி, ஏதத்ஸர்வம், அம்ருதம் மஹாநைவேத்யம்
நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி அம்ருதாபிதாநமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

லவங்க கர்ப்பூரயுதம் தாம்பூலம் ஸுரபூஜிதம்/
ப்ரீத்யா க்ருஹாண தேவேச’மம ஸௌபாக்யம் விவர்த்தய//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தத்தை தெளித்து, நைவேத்யம் செய்யவும்.)

யஜ் ஜ்யோதிஸ் ஸர்வ லோகானாம் தேஜஸாம் தேஜ உத்தமம்/
ஆத்மஜ்யோதி: பரம்தாம நீராஜனமிதம் ப்ரபோ//
ஸ்ரீபூமி நீளா ஸமேத மஹாவிஷ்ணவே நம:
கர்ப்பூர நீராஜனம் தர்ச’யாமி
(கற்பூரம் காட்டவும்)

ஸுவர்ன ரஜதைர் யுக்தம் சாமீகர வினிர்மிதம்/
ஸ்வர்ணபுஷ்பம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் மதுஸூதன//
மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி

ப்ரதக்ஷிணம் கரோம்யத்ய பாபானி நுத மாதவ/
மயார்ப்பிதான்யசே’ஷாணி பரிக்ருஹ்ய க்ருபாம் குரு//

யானி கானிச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச/
தானி தானி ப்ரணச்’யந்தி ப்ரதக்ஷிணபதே பதே//
(பிரதக்ஷிணம் செய்யவும்.)

நமஸ்தே தேவதேவேச ’ நமஸ்தே பக்தவத்ஸல/
நமஸ்தே புண்டரீகாக்ஷ வாஸுதேவாய தே நம://

நமஸ்ஸர்வஹிதார்த்தாய ஜகதாதார ரூபிணே/
ஸாஷ்டாங்கோயம் ப்ரணாமோஸ்து ஜகந்நாத மயா க்ருத://
அனந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி.
(ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்யவும்.)

சத்ரசாமராதி ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி.
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)

அர்க்யம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா,
ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், ஏகாதசீ’ புண்யகாலே
மஹாவிஷ்ணு பூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதா’னம்,
உபாயன தானம் ச கரிஷ்யே.

(என்று சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பாலால் அர்க்யம் விடவும்.)

ஏகாதச்’யா முபோஷ்யைவ பாரணாத் பூர்வகாலத:/
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண ஸுரவந்தித://
மஹாவிஷ்ணவே நம: இதமர்க்யம் (3 முறை)

நமோஸ்து கேச’வாதிப்ய: ஸர்வலோகைக வந்திதா:/
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவ ஸர்வதா//
கேசா’வாதிப்ய நம: இதமர்க்யம் (3 முறை)

கூர்ம ரூபாய தேவாய மத்ஸ்ய ரூப நமோஸ்து தே/
நீலமேக ஸ்வரூபாய அர்க்யம் தத்தம் மயா ப்ரபோ//
விஷ்ணவே நம: இதமர்க்யம் (3 முறை)
அனேன அர்க்யப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
லக்ஷ்மீ நாராயண: ப்ரீயதாம்//

உபாயன தானம்

(பூஜை, செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

மஹாவிஷ்ணு ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்.
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்//
(ஆஸனத்தில் அமரச்செய்து, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்.)

(பிறகு தாம்பூலம், தக்ஷிணை, மற்றும் நைவேத்யங்களையும் சேர்த்து கீழ்க்கண்ட மந்த்ரங்களை சொல்லித் தரவும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேம பீஜம் விபாவஸோ://
அனந்த புண்ய பலதம் அதச்’சா’ந்திம் ப்ரயச்ச மே//

ரமேச’: ப்ரதிக்ருஹ்ணாதி ரமேசோ’வை ததாதி ச/
ரமேச’ஸ் தாரகோ த்வாப்யாம் ரமேசா’ய நமோ நம://

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் மஹாவிஷ்ணு
பூஜா ஸாத்குண்யம் காமயமான: துப்யமஹம்
ஸம்ப்ரததே ந மம//

புனர் பூஜை/ யதாஸ்த்தானம்

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு/
ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம்//

பிறகு, அன்று மாலை அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம் காட்டி, பழம், பால் நைவேத்யம் செய்து “ஸ்ரீபூமிநீளா ஸமேத மஹா விஷ்ணும் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 38. ஏகாதசி விரதம் »
விஷ்ணுபக்தி உள்ளவர்கள் ஏகாதசி விரதத்தை ஒரு நாளும் செய்யாமல் இருக்கக்கூடாது. ஏகாதசி விரதம் ஆயுளையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar