மகுடஞ்சாவடி காளியம்மன் கோவில் திருவிழாவில் எருதாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2018 03:11
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று (நவம்., 9ல்) எருதாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம், காகாபாளையம்,கனககிரி கிராமம், பழமண்டி பகுதியில் கரியகாளியம்மன் கோவில் உள்ளது.
கோவிலில் கடந்த, 24 ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 30 ல் சுவாமி புறப்பாடும், நேற்று முன்தினம் (நவம்., 8ல்) அம்மனுக்கு சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று (நவம்., 9ல்) மாலை கோவில் வளாகத்தில், எருதாட்டம் நடந்தது. இதில் 10 மேற்பட்ட காளைகள் கயிற்றில் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டன. இளைஞர்கள் பொம்மையை காட்டி காளைகளை கோபமுட்டினர். காளைகள் சிறிபாய்ந்தன. திரளான பொதுமக்கள் எருதாட்டத்தினை கண்டுகளித்தனர்.