பதிவு செய்த நாள்
10
நவ
2018
03:11
ராசிபுரம்: வெங்காயபாளையம் மாரியம்மன் கோவிலில், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ராசிபுரம் அடுத்த, வெங்காயபாளையத்தில், ஆத்தூர் பிரதான சாலையோரம், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத பொங்கல் விழா, 15 நாட்களுக்கு முன் நடந்தது.
இதையொட்டி, கடந்த, 7ல் பொங்கல் வைத்தல், அலகு குத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் (நவம்., 8ல்), குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கடைசி நாளான நேற்று (நவம்., 9ல்), மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். பக்தர்கள், சேற்றை பூசிக்கொண்டு வந்தனர். மேலும், மஞ்சள் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றிக்கொண்டனர்.