ராமநாதபுரம்: குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி சப்பரத்தில் வளம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் சுவாமிநாத சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் வளம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விரதம் இருந்த பெண்கள் கோயிலின் வளாகத்தில், ஆறுமுகம் கொண்ட உற்சவரை சப்பரத்தில் இழுத்து வலம் வந்து வழிபட்டனர்.