பதிவு செய்த நாள்
12
நவ
2018
11:11
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு சஷ்டி விழா, 8-ம் தேதி, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
நாளை அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன.தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன், தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளிக்கிறார். மாலை, 4:30 மணிக்கு, கோவில் கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில், சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில், 3,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன.