பதிவு செய்த நாள்
12
நவ
2018
12:11
திருத்தணி: நாக சதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், பாம்பு புற்றிற்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.
தீபாவளி முடிந்து, ஐந்தாம் நாளில், நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவையொட்டி, திருத்தணி நகரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர் குளக்கரையில் உள்ள நாகவள்ளி கோவில் உள்ளிட்ட கோவில்களில், நாக சதுர்த்தி விழாவையொட்டி, திரளான பெண்கள், அங்குள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதே போல், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் உட்பட, திருத்தணி தாலுகாவில் உள்ள அம்மன் கோவில்களில் நாக சதுர்த்தி விழாவையொட்டி, பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், பால், முட்டை புற்றில் ஊற்றி வழிபட்டனர்.