கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3) பெண்களால் நன்மை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 01:11
சூரியன் விருச்சிக ராசியில் இருக்கும் போது உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கல்விக்காரகனான புதன் வக்கிரம் அடைந்து 9-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். அவரால் மனதில் வேதனை ஏற்படலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். டிச.8ல் புதன் வக்கிர நிவர்த்தி அடைந்து 10-ம் இடத்திற்கு வருகிறார். இதனால் பெண்களால் பொன், பொருள் சேரும்.
சுக்கிரன், சனி, ராகுவால் நன்மை அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையில் இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. செல்வாக்குக்கு குறைவு ஏற்படாது. பொருளாதார வளம் சிறக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சகோதரிகள் மிக உறுதுணையாக செயல்படுவர்.
சுக்கிரன் தற்போது 9-ம் இடமான தனுசில் இருக்கிறார். இதனால் குடும்பத்தில் வசதி பெருகும். குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் நன்மை உண்டாகும். குறிப்பாக நவ.17, டிச.13,14,15ல் அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். நவ.21,22ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். நவ.23,24ல் உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் டிச.8,9,10ல் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை உண்டாகும்.
புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். டிச.7க்கு பிறகு கணவன்-, மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பது சிறப்பானதல்ல. இதனால் அண்டை வீட்டாரால் தொல்லை ஏற்படலாம்.
பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் டிச.7க்கு பிறகு ஒன்று சேர்வர். அதன் பிறகு கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சகபெண் ஊழியர்கள் ஆதர வுடன் செயல்படுவர். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். டிச.6,7ல் நற்பலனை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து டிச.7க்கு பிறகு விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும். நவ.27,28ல் எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். நவ.18,19,20,டிச.11,12ல் முயற்சிகளில் தடை குறுக்கிடலாம். கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். டிச.7க்கு பிறகு நண்பர்களால் ஏற்பட்ட பிரச்னை தீரும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். நெல், கோதுமை, சோளம், பழவகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் டிச.7க்கு பிறகு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதுசொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
பெண்களால் குடும்பத்தினருக்கு பெருமை உண்டாகும். அக்கம்பக்கத்தினர் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தாரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். டிச.7க்கு பிறகு தம்பதி யிடையே ஒற்றுமை பலப்படும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று மகிழ்வீர்கள். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர்.