பதிவு செய்த நாள்
13
நவ
2018
11:11
பழநி, பழநி முருகன் கோயிலில் கார்த்திகைத் திருவிழா, நவ.,17ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி 23 வரை நடக்கிறது.கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் நவ.,17ல் மாலை சாயரட்சை பூஜையில் மூலவர் முருகர், சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழா நாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலைபூஜை, சண்முகர்ச்சனை, சின்னக்குமாரசுவாமி தங்கசப்பரத்தில் திருவுலா நடக்கிறது. நவ.,23ல் பெரிய கார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படும். அன்று மாலை சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். மலைக்கோயிலின் நான்கு பக்கங்களிலும் தீபங்கள், மேற்கு தீபக் கம்பத்தில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும். அன்று இரவு தங்கரதப்புறப்பாடு கிடையாது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.