பதிவு செய்த நாள்
13
நவ
2018
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று(நவ., 13) மாலை 6:00 முதல் 6.30 மணிக்குள் நடக்கும் சூரசம்ஹாரத்திற்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் பணியாளர்கள் திருக்கண்ணில் நேற்று மாலை சத்தியகிரீஸ்வரர், தெய்வானை அம்மனுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
வேல் வாங்குதல்: மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அம்பாளிடம் இருந்த நவரத்தின வேல் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று, மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. பின் சிறப்பு தீபாராதனை முடிந்து, பூச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்தார். இன்று மாலை 5:00 மணிக்கு சொக்கநாதர் கோயில் முன், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் இன்று மாவு விரதம் மேற்கொள்வர். இதற்காக பக்தர்கள் பச்சரிசியில் மாவு இடித்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து மாவு தயார் செய்தனர்.