பதிவு செய்த நாள்
13
நவ
2018
12:11
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின், தானுகந்த திருமேனிக்கு, பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் வெந்நீர் அபிஷேக மரபு, நேற்று மீண்டும் துவங்கியது.ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார், வைணவ மகான் ராமானுஜர். அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது சீடர்களால், ராமானுஜரின் உருவம் தாங்கிய, செப்பு விக்ரகம் உருவாக்கப்பட்டது.ராமானுஜர் அதைக் கண்டு, மகிழ்ந்து, தழுவி, தன் சக்தியை அதனுள் செலுத்தினார். இந்த உற்சவ விக்ரகம், தானுகந்த திருமேனி என, அழைக்கப்படுகிறது.ராமானுஜரின் தானுகந்த திருமேனி, ஸ்ரீபெரும் புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் பாதுகாக்கப்பட்டு, பல நுாற்றாண்டு களாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.இந்த சிலைக்கு, கோடை காலத்தில், குளிர்ந்த நீராலும், குளிர் காலத்தில் வெந்நீராலும் அபிஷேகம் செய்து, பருவ நிலைக்கு ஏற்ப பாதுகாக்கப் படுகிறது.அதன்படி, நேற்று முதல், ராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகம் துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டு, ஜன., 26 வரை ராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகம் தொடரும்.